சாத்தான் குளம் தந்தை மகன் கொலை வழக்கு – குற்றவாளிகளே காவல் துறை அதிகாரிகள் தான்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் தந்தையும் மகனும் காவல்துறையால் தாக்கப்பட்டு பிறகு உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கில், இந்த சம்பவம் “கொலை” என தீர்மானிக்கப்படுவதாக மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2020-ல் நடந்த இந்த கொடூர சம்பவத்தில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 போலீசாருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெண் தலைமைக் காவலரின் வாக்குமூலம், மருத்துவ அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கை ஆகியவற்றை மதுரை நீதிமன்றம் கருத்தில் கொண்டு, காவல் மரணங்களில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு உயிரிழந்த தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது

Source credit – google

