கல்விசெய்திகள்தேசியம்வேலைவாய்ப்புகள்

தமிழ் நாட்டில் பாதுகாப்புத்துறையில் வேலைவாய்ப்பு!

இந்திய பாதுகாப்பு துறையில் சென்னையில் பணியிடமாகக் கொண்ட வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஒடி ராணுவ அகடமியில்அதிகாரி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உடைய திருமணமாகாத இந்திய பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் ஓடி ராணுவ அகடமியில் சர்வீஸ் கமிஷன் ஆபிஸர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உடைய ஆண் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட எண்ணிக்கை

ஓடிஏவில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 191 ஆகும். இரண்டு பணி இடங்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் விதவைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

சம்பளம்

சென்னையில் ஒடிஏவில் பணி பெறுபவர்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் 56 100 முதல் 1,77, 500 வரை சம்பளத் தொகை வழங்கப்படுகின்றது.

வயது

பாதுகாப்புத்துறையில் விண்ணப்பிக்க ஓடிஏவில் 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி

பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், ஐடி, ஏரோநாட்டிக்கல் கணினி அறிவியல் போன்ற பாடப்பிரிவுகளில் பிஇ, பிடெக் பாடத்தில் முடித்திருக்க வேண்டும். கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவார்கள்.

விண்ணப்பம்

இந்திய பாதுகாப்புத்துறையின் பணி வாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி நவம்பர் 12, 2020 ஆகும். இந்தியப் பாதுகாப்பும் துறையில் பணி வாய்ப்பு பெற அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை http://www.joinindianarmy.nic.in/Authentication.aspx இங்கு கொடுத்துள்ளோம். மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/SSCW_TECH_27.pdf லிங்கினை படித்துப் பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *