ஆன்மிகம்

திருப்புகழ் பாடல்314

திருப்புகழ் பாடல் முருகப்பெருமான் அவரைப் போற்றி ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு சிறப்பு குணங்கள் கொண்டு பாடப்படுகின்றது. அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் பாடல் அவ்வகையில் காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானின் சிறப்பை பன்னிரு தோள்களின் வலிமை, வள்ளி திருமண வரலாறு மற்றும் சமர்ப்பணமான பக்தி நெறியை உணர்த்துவதுடன் ஞானம் அறிவு முருகன் மீது கொண்டுள்ள உண்மையான பற்று இதன் மூலமாக முக்தி கிடைப்பது ஆகியவற்றை விளக்கிக் கூறுகின்றது. அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் பாடல்கள் பின்வருமாறு

புனமடந் தைக்குத் தக்கபு யத்தன்
     குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும்
          பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் …… பிறிதேதும்

புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்
     சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
          பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந் …… தனைநாளும்

சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண்
     டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந்
          தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் …… செயல்பாடித்

திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்
     திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்
          சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் …… றருள்வாயே

கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம்
     கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண்
          கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்கும் …… திருவாயன்

கவளதுங் கக்கைக் கற்பக முக்கண்
     திகழுநங் கொற்றத் தொற்றைம ருப்பன்
          கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன் …… றனையீனும்

பனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண்
     கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண்
          பழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண் …… பணிவாரைப்

பவதரங் கத்தைத் தப்பநி றுத்தும்
     பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம்
          பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் …… பெருமாளே.

திருப்புகழ் பாடல்314

முருகப்பெருமான் அவர்களுக்காக அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் பாடலான 314 அன்பினால் வள்ளி தாயை மணந்தது பக்தர் மனதில் அறிவு சித்தம் முழுமையும் தன்வசம் செய்து அவர்களை வழிநடத்துகிறது.

முருகன் அவர் நெஞ்சத்தில் நிறுத்தி எப்பொழுதும் கற்பனையில் பக்தியில் கொண்டு மற்றவற்றை நினைக்காமல் புகழ்ந்து சொல்லப்பட்டு 96 வகையான தத்துவங்களையும் தன்னூல் கொண்டவரானவர், சூரியனின் பேராற்றலான ஒளியை கொண்டவர் ஒப்பற்ற செல்வம் கோபம் கொண்டு வாதாடும் திறன் பெற்றவர் அறுவகை சமயத்தாரும் அறிந்து சத்திய பொருளாக தரிசனம் செய்யத்தக்க உன் திருவிளையாடல் பாடி திகில் தோறும் உபயோகி உபதேசித்து வர தெய்வமே நீ என் மேல் சற்று தயை கூர்… வெச்சி மாலை மண் வீசி சதங்கை அணிந்து உன் அழகிய திருவடி தாமரைக்கு எப்போதும் தந்து அருள்வாய்..
சர்க்கரை தேங்காய் கடலை கற்கண்டு வாரி உண்டு என் பொறி அப்பம் பழம் கொழங்கு கரும்பு இவைகளையும் நீ சுவைத்து விட்டுடன் விளங்கும் திருவாய் உடையவரானவரே. கற்பக விநாயகரை போல கேட்டதை அருள் பவர் ஒன்பது கோணங்கள் உடைய சக்கரத்தில் வீற்றிருக்கும் பெண்மணி பழையவளும் அண்டங்களை பெற்றவளும் ஆகிய இளம் பெண் வரம் பெற்று கட்சிகள் இருக்கும் காஞ்சிபுரத்தில் இன்றும் பெருமாளே என்று போற்றப்படுகின்றார் இவ்வாறு காஞ்சிகள் பெற்றிருக்கும் முருகரை போற்றி பாடி அருணகிரிநாதர் திருப்புகழை பாடி இயற்றியுள்ளார்.

மேலும் ஆன்மீகம் படிக்க இங்கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *