மீண்டும் அதிமுக பிளவு ஏன்?? என்னதான் ஆச்சு எடப்பாடி பழனிசாமி vs எஸ்.பி வேலுமணி
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அதிமுக கழகமானத்தின் ன் வரலாறு பல பிளவுகளைச் சந்தித்துள்ளது. குறிப்பாக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் இழப்பிற்காக பிறகு பல பிளவுகளாகவும் பல கட்சிகளாகவும் பிரிந்துள்ளது,மீண்டும் ஒரு பிளவை சந்திக்கும் சூழலுக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. பழனிசாமிக்கும், வேலுமணி + சண்முகத்துக்கும் இடையே வெடித்துள்ள மோதல், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது
ஜெயலலிதா மறைவிற்குப் பின் அழிவை செல்லும் நோக்கி அதிமுக
எம்ஜிஆர் மறைவிற்குப் பின் ஜெயலலிதா மட்டுமே தொடர்ந்து இரண்டு முறை முதலமைச்சர் பதவியில் இருந்து அதிமுக கட்சிக்கு என்ற அதிமுக கட்சிக்கு என்ற தனி அசைக்க முடியாத நம்பிக்கையையும்,பெருமிதத்தையும் அசைக்க முடியாத தைரியத்தையும் கொடுத்து தனக்கென்று ஒரு மகுடத்தை சூடினார்
அவருடைய மரணத்திற்குப் பிறகு ஆரம்பித்தது அதிமுக தலைமை சிக்கல், சசிகலா பொறுப்பே இல்லையே ஏற்க வரும் பொழுது ஓ பன்னீர்செல்வம் முதன் முதலில் பிளவை ஏற்படுத்தினார், அதன் பின்னர் எடப்பாடி முதலமைச்சர் ஆகிய நிலை, சசிகலாவும்,டிடிவி தினகரனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர், அப்போது அதிமுக கட்சி வந்து இரண்டாவது பிளவை சந்தித்தது
Credits – google

தற்போது மூன்றாவது பிளவு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எஸ் பி வேலுமணிக்கிடயே உட்பூசல்
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதன் காரணமாக, ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி என 50 ஆண்டுகளாக இருந்துவந்த அதிமுக இப்போது மூன்றாவது கட்சியாக மாறியுள்ளது. பல தொகுதிகளில் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக, கணிசமான தொகுதிகளில் டெபாசிட்டையே இழந்தது அதிர்ச்சியை உருவாக்கியது.
தேர்தல் சமயத்திலும்,தேர்தலுக்கு இன்றைய சமயத்தில் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முடிவுகள் அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. n
கொங்கு மண்டலத்தில் கணிசமான தொகுதிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது. இதனால் வேலுமணியின் கை ஓங்கியுள்ளது. அதேபோல வட மாவட்டங்களிலும் அதிமுக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது, அங்குள்ள எம்எல்ஏக்கள் சி.வி.சண்முகம் பின்னால் அணி திரண்டுள்ளனர்.
எஸ் பி வேலுமணி தலைமையில் அதிமுக கட்சி
தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமைப் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும், கட்சிக்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையில் தலைமை பொறுப்பை மாற்ற வேண்டும் என்று எஸ் பி வேலுமணி தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது
தற்போது எஸ் பி வேலுமணி சி.வி சண்முகம் தலைமையிலான கூட்டணியில் 35 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர், எடப்பாடி பழனிச்சாமி இருக்கு 17 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்

