செய்திகள்தமிழகம்

PM Modi visit palladam : பல்லடத்தில் பாரத பிரதமர் வருகை; அசத்தும் தொண்டர்கள்

பல்லடத்தில் பாரத பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மாநில தலைவர் அண்ணாமலையின் முகமூடி அணிந்து மாநாட்டுக்கு அழைப்பு விடுத்த பாஜகவினர்

பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை அவர்களின் என் மண் என் மக்கள் நடைபயணம் நிறைவு விழா திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளதை தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்லடத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொது கூட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.

இப்பொதுக்கூட்டமானது  பிரமாண்டமான முறையில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

என் மண் என் மக்கள் நிறைவு விழா பொதுக்கூட்டத்திற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பல்லடத்தில் பேருந்து நிலையம் என்.ஜி.ஆர் சாலை, கடைவீதி ஆகிய இடங்களில் பொதுமக்கள் வியாபாரிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் பாஜக நிர்வாகிகள் அண்ணாமலை அவர்களின் உருவம் பொறித்த முகமூடியை அணிந்து கொண்டு துண்டு பிரசுரங்கள் வழங்கி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *