செய்திகள்தமிழகம்

செப்டம்பர் மாதம் பொது முடக்கத்துடன் கூடிய கூடுதல் தளர்வுகள் தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு அறிவிப்பு மாவட்டத்திற்குள் பொது போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டன சென்னையில் செப்டம்பர் 1 முதல் பேருந்துகள் ஓடும். செப்டம்பர் ஏழாம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் இரவு 8 மணி வரை கடைகள் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், பெரிய கடைகள் 100% பணியாளர்களுடன் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டன.

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பில் தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுகிறது.

வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் முறை தொடர்கிறது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் கிடையாது என்று செப்டம்பர் மாதத்திற்கு உரிய கூடுதல் தளர்வுகள் இவை. செப்டம்பர் மாதம் பொது முடக்கத்துடன் கூடிய கூடுதல் தளர்வுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *