சினிமாசெய்திகள்தமிழகம்

ரங்கராஜ் பாண்டேவின் சாணக்கியா!

அவசர ஊடக உலகில் இது அதிரடியாகச் சாணக்கியா அவத்தரிக்கின்றது. ஆளுமை மிக்க ஊடகம் அறிவோடு மக்களைக் கையால்கின்றது. 3 நிமிட சுருக்கச் செய்திகள் சுடசுட நச்சுன்னு இருக்கின்றது. எதனையும் எட்டு திசையில் சிந்திக்கின்றது. டிரெண்டிங் வைரல் செய்தியில் மக்களுக்குக் கண்டபடி இல்லாமல் நேர்த்தியாக எடுத்துச் செல்லப்படுகின்றது. எல்லாம் சரி ஆரம்பம் இப்படித்தான் இருக்கும் பிறகு தடமாறும் என்கின்றனர்.அவர்களுக்குச் சாணக்கியாவின் போக்கை வைத்துதான் நாம் பதில் சொல்ல முடியும்.

லாக் டவுனில் செய்திகள் எல்லாம் நேரம் நேரத்திற்கு 3 நிமிட செய்திகளாக மக்களை எளிதில் வந்துவிடுவதாக மாற்றியிருக்கிறார். அவ்வப்போது சமுதாயத்தில் தேவைப்படும் ட்ரெண்டிங் கைகளை எல்லாம் தரமாக எடுத்து கொடுக்கின்றார். அதேசமயம் மீடியா பேய்த்தனமாக இல்லை. தேவையற்ற சமுதாயத்திற்கு பயன் இல்லாத, வேலை இல்லாமல் செலிபிரட்டி ட்ரெண்டிங் இவைகளையெல்லாம் அடியோடு தவிர்க்கிறார்.

அதற்கு ஒரு சிறந்த உதாரணம் வனிதா விஜயகுமார் அவரின் திருமணம் அவரை வைத்து மற்ற மீடியாக்கள் எல்லாம் ஆட்டம் போட, சாணக்கியாவோ அறிவாக சீனா இந்தியா விவகாரம் சரியாக எடுத்துச் சொன்னது, அதுவும் இதுவரை எந்த மீடியாவும் செய்யாத ஒரு சாதனையாக முன்னாள் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் சாத்தான்குளம் மற்றும் கந்த சஷ்டி கருத்து முரண்பாடுகள் என அதைப்பற்றி மட்டுமே பேசி கருத்தைப் பதிவிட்டிருந்தது பாண்டேவின் சாணக்கியா சபாஷ் சொல்ல வேண்டும் என்று இருந்தது.

ஊடகக் கல்வியகம்:

அட ஊரடங்கு சும்மா வெட்டியாக இருக்காமல் உருப்படியாக எதையாவது செய்வோம் தான் கற்றதை பிறருக்கு கற்றுக் தர ஊடகத்தைக் அதில் தான் கற்றதை கற்றுத்தர ரங்கராஜ் பாண்டே கல்வியகம் ஒன்றைத் தொடங்கி அதில் இணைய அறிவித்திருந்தார். பெருமைக்குரியதாக இருந்தது அதில் விவரங்கள் தெளிவாகக் கேட்டிருந்தார் விருப்பம் உடையவர் அந்த விவரங்களைச் சில சிலேட்டு குச்சிகள் பதிவிட்டு இருக்கின்றோம். அந்தத் தகவலைப் பின்பற்றி அவரது கல்வி இயக்கத்தில் சேர விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். இதுவரை ஒரு தேடல் இருந்தது, ஊடகத்தின் மேல் குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் நல்ல நேரம் பார்த்துதான் உதயமாகியிருக்கின்றது சாணக்கியா போன்ற ஊடகங்கள் வரவேற்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *