செய்திகள்தமிழகம்தேசியம்

கால்வாயில் குதித்த பெண்ணை காப்பாற்றிய கான்ஸ்டபிள்

ஆழமுள்ள கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. இந்த கால்வாயில் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த பெண்ணை போலீஸ் கான்ஸ்டபிள் காப்பாற்றியுள்ளார். கணவரிடம் சண்டையிட்டு கால்வாயில் விழுந்து தற்கொலை முயற்சி செய்த பெண்ணை காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிள்.

  • தற்கொலை முயற்சி செய்த பெண்ணை காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிள்.
  • மயக்கமடைந்த பெண்ணுக்கு அருகில் இருக்கும் பெண்களை அழைத்து முதலுதவி.
  • கடமையை பாராட்டி இவருக்கு வெகுமதி அளித்தார் கமிஷனர்.

பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

குவிந்து வருகிறது பாராட்டுக்கள். உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் கால்வாய் பகுதியில் மக்கள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்து குறித்து கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மதிய வேளையில் கால்வாயில் குதிப்பதை பார்த்த இளைஞர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

வெகுமதி அளித்த கமிஷனர்

தகவல் தெரிந்ததும் கான்ஸ்டபிள் சற்றும் யோசிக்காமல் பல மீட்டர் நீந்திச் சென்று அப்பெண்ணை மீட்டுள்ளார். மயக்கமடைந்த பெண்ணுக்கு அருகில் இருக்கும் பெண்களை அழைத்து முதலுதவி செய்து உள்ளார். இவர் கடமையை பாராட்டி இவருக்கு இருபதாயிரம் ரூபாய் வெகுமதி அளித்தார் கமிஷனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *