அன்பும் உறவும்குழந்தைகள் நலன்வாழ்க்கை முறை

பெற்றோர் குழந்தைகள் இடையே நேர்மறையான உறவை மேம்படுத்த

உங்கள் குழந்தைகளை நேசிப்பதை அடிக்கடி அவர்களிடம் கூற வேண்டும். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது குழந்தைகளுடன் விளையாடுங்க. பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், குழந்தைகள் விளையாட ஏங்கிப் போய் இருப்பார்கள். இதனால் பெற்றோர்கள் மீது கோபம் அதிகரிக்கும். சில நேரங்களில் தனிமையிலேயே இருந்து விடலாம் என மனது இறுகிவிடும்.

  • உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது குழந்தைகளுடன் விளையாடுங்க
  • பெற்றோர்கள் மீது கோபம் அதிகரிக்குதா.
  • வேலைக்கு செல்லும் பெற்றோராக இருந்தா

தருணங்களை பகிர்ந்து

சிறுவயதிலிருந்து விளையாட்டு, மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். சாப்பிடும், தூங்கும் நேரத்தை தீர்மானித்தல் அவசியம். தூங்கும் போது குழந்தைகளுக்கு கதை சொல்லுதல், பள்ளியில் நடந்ததை பற்றி கேட்பது போன்ற செயல்கள், வேலைக்கு செல்லும் பெற்றோராக இருந்தாலும் கூட அவர்களுக்கு குழந்தைகளுடன் பேசும்போது உறவை வலுப்படுத்தும்.

குழந்தைகளின் மனநலம் நன்றாக இருக்க

குழந்தைகள் தேவைப்படும்போது கண்டிப்பாக உங்களின் கவனம் கிடைத்தல் அவசியம். ஏதாவது கேட்டால் அது குறித்து பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும். அதில் குழந்தைகளை நிறைவு செய்வதாகவும் இருக்க வேண்டும். இதனால் குழந்தைகளின் மனநலம் நன்றாக இருக்கும். எப்போதும் கோபத்தை மட்டுமே வெளிப்படுத்தக் கூடாது. குழந்தைகள் மீது நம்பிக்கை வைக்கும் பெற்றோர் ஆகவும், குழந்தைகள் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கவும் வேண்டும்.

உண்மையாக இருக்க

குழந்தைகள் உண்மையாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது போன்று, குழந்தைக்கு நீங்களும் உண்மையாக இருக்க வேண்டும். தாய் குழந்தை உறவானது வயிற்றில் உருவாகும் போதே தொடங்கி விடுகின்றன. தந்தையை பொருத்தவரை ஆரம்பத்திலிருந்தே குழந்தை உடனான உறவை மேம்படுத்த வேண்டும். குழந்தை பிறந்ததிலிருந்து அவர்களுடன் நேரம் செலவிடுவது அவசியம்.

எதிர்பார்ப்பு என்ன

பெற்றோர்களுடன் தங்கள் நேரம் மற்றும் முயற்சியை செலவிடுதல் வேண்டும். உங்களுடைய அன்பை காட்ட முடியுமோ அப்போதெல்லாம் காட்டுங்கள். அவர்களுடன் நேரம் செலவிடுவது எவ்வளவு முக்கியமோ? அதே போன்று வயதை கருத்தில் கொள்ள வேண்டும். சிறு குழந்தைகள் பெற்றோருடன் அதிக நேரம் செலவிட ஆசைப்படும். இளம் பருவத்தினர் தனியாக நேரம் செலவிட ஆசைப்படுவர். குழந்தைகளின் ஆசையை எதிர்பார்ப்பு என்ன என்பதை புரிந்துகொண்டு அதற்கேற்ற பெற்றோராக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *