செய்திகள்தேசியம்

ரஜினியின் உடல்நிலை சீராகின்றது!

ரண களமாகும் அரசியல் களம் தமிழ் நாட்டில் பரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த சூழலில் ரஜினியின் உடல்நிலை சற்று சரியில்லாமல் போனது.

படப்பிடிப்பு இரத்து

ஐதராபாத்தில் அண்ணாத்த திரைப்படமானது சூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போது மூன்று பேருக்கு கொரோனா உறுதியானது ஆகிய காரணத்தால் அண்ணாத்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதனுடன் இருந்து வந்த அவரது மகள் ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து ரஜினியை கண்காணித்து வந்தார்.

மருத்துவமனையில் அனுமதி

ரஜினி மீண்டும் சென்னை வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் ரஜினிக்கு ரத்த அழுத்தமானது அதிகரித்து காணப்படுகின்றது. இதனையடுத்து அவர் ஹைதராபாத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்.

அடிக கடினமான உழைப்பு

மருத்துவமனை வளாகம் முழுவதும் மக்கள் வெள்ளம் காணப்படுகின்றது. மருத்துவமனை நிர்வாகம் அவர் இருக்கும் பகுதியில் யாரையும் அனுமதிக்கவில்லை. மேலும் ரஜினியின் உடல்நலம் தேறி வருகிறது எனவும் அவர் இரத்த அழுத்தத்திற்கு காரணம் அண்ணாத்தப் படத்திற்காக இரவு பகல் பாராத உழைப்பும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கொரோனா ரஜினிக்கு இல்லை

அடுத்து ரஜினி ஏதேனும் கொரோனா தாக்குதல் இருக்கின்றதா என்று பரிசோதிக்கப்பட்டது. அது போன்ற பாதிப்பை இல்லை என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன. மேலும் ரஜினி தான் தனியாக இருப்பதாகச் சொல்லித் தன்னை யாரும் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றார். இதனை அடுத்து அவர் ஓய்வு முழுமையாக எடுத்தாலே உடல் குணமாகும்.

தனிமையில் ஓய்வு

ஹைதராபாத் மேயர் ரஜினியை பார்க்க வருவதாக இருந்தது. ஆனால் ரஜினி அதையும் அன்புடன் மறுத்துத் தாம் நலமுடன் இருப்பதாகவும் தனக்கு ஓய்வு தேவை என்றும் கூறி தனிமையில் இருக்கின்றார். மேலும் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவையும் அனுப்பி வைத்துள்ளார்.

உடல்நிலை சீராகி வரும்

நன்றாக உறங்கினாள் உடல்நிலை சரியாக மென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அத்துடன் மேலும் ரஜினியின் உடல்நிலை முழுவதுமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இந்தச் செய்தியானது காட்டுத்தீயாகப் பரவி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் பரபரப்பை உண்டு செய்து பயத்தையும் உண்டு செய்திருக்கின்றது என்று சொல்லலாம்.

பிரபலங்கள் ரஜினி குணமாக நலம் விசாரிப்பு

ஹைதராபாத் ரசிகர்கள் அதிகம் பல பிரபலங்கள் அவருக்கு மீண்டு வரத் தெரிவித்திருக்கின்றனர். மேலும் பலர் கவலையுடன் இருக்கின்றனர். ஆனால் ரஜினி தான் நலமாக இருப்பதாகவும் தகவல் அறிவித்திருக்கின்றார் இது அரசியல் களத்தைச் சற்று ஆட்டம் காண வைத்திருக்கின்றது என்றே கூறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *