செய்திகள்தமிழகம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்..!! விசாரணை ஆணைய காலக்கெடு நீட்டிப்பு..!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மே மாதம் 25ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த அதிமுக ஆட்சியில் 2018 மே 22 ஆம் தேதி மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தைக் கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையம் விசாத்து வருகிறது. இந்த ஆணையம் விசாரணையை முடித்து விட்டதாக சமீபத்தில் அறிவித்ததோடு, இன்னும் 3 மாதத்தில் விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை ஆணையத்தின் காலம் மேலும் 3 மாதம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மே மாதம் 25-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து 36 கட்டமாக 1,426 பேருக்கு சம்மன் அனுப்பி 1,048 பேரிடம் அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *