தமிழகம்வேலைவாய்ப்புகள்

தமிழ்நாட்டில் சத்துணவு கூடத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாட்டில் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின் படி சென்னை மாவட்டத்தின் கீழ் எம்ஜிஆர் சத்துணவு திட்ட பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

சத்துணவு அமைப்பாளர் சமையலர் சமையல் உதவியாளர் தகுதியுடையோர் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதன்படி தகுதியுடையோர் நேரடியாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து செப்டம்பர் 25ஆம் தேதிக்குள் சமூக நலத்துறை உணவுத் திட்டத்தின் நலத்துறை சமையலர் பணிக்குச் சமையல், சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் நேரடியாக விண்ணப்பங்களைக் கொடுக்கலாம் அல்லது சென்னை மாவட்டத்தில் சுற்றுப்புறத்தில் இருப்பவர்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தாரர் சென்னை மாநாகராட்சிக்கு உட்ப்பட்டு இருக்க வேண்டும். மேலும் இருப்பிடத்தை தெளிவாகக் கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தர் விண்ணப்பத்தில் தான் சார்ந்தப் பகுதி, கல்வி, திருமாணவரா, அல்லது கணவரால் கை விட்டப்பட்டவரா போன்ற தகவல்கள் சரியாகக் கொடுத்துச் சான்றிதழ் நகழ்களை கொடுக்க வேண்டும்.

மேலும் ரூபாய் 25 மதிப்புள்ள தபால் தலை வாங்கி ஒட்டி ஆணையர், சமூக நலம், சத்துணவுத்திட்டத்துறை, சைதா பேட்டை, பனகல் மாளிகை, சென்னை 600015 என்ற முகவரிக்கு அனுப்பவும். செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணைய லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம். http://www.tn.gov.in/ மேலும் அதிகாரப்பூர்வ நோட்டிபிகேசன் இணைப்பு பெற https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr170920_674.pdf கிளிக் செய்யவும். கிடைக்கும் பிடிஎஃப் ஆவணத்தை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கவும். http://www.middaymeal.tn.gov.in/ கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *