கதி கலங்க செய்யும் காலநிலை ஆறுதல் தரும் சோலார்
இன்றைய காலகட்டத்தில் வெப்பமானது அதிகரித்து காணப்படுகிறது. மழையை நம்பி காத்துக் கிடக்கும் மக்கள் ஒரு பக்கம், வெயில் போகாதா என்று வானத்தை பார்க்கும் மக்கள் ஒரு பக்கம், இதெல்லாம் இப்படி இருக்க பஞ்சம் வரப்போகுது, மழை வராது என்று கணிப்புகள் மறுபக்கம். அதுமட்டுமா அதிகரிக்கும் எலக்ட்ரிகல் பில் என்னடா செய்வது என்று மக்கள் ஒரு பக்கம் இதற்கு மாற்றாக ஆறுதல் தரும் சோலார். வீடுகளில் சோலார் பொருத்தம் அதிகரித்து மக்களுக்கு ஆறுதல் தருகின்றது.

சோலார் அமைக்க பிரதமர் சூரியக்கர் யோஜனா
அதிகரித்து வரும் வெப்பம் மின் கட்டணம் ஆகியவற்றை சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இன்றைய காலகட்டத்தில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சோலார் பொருத்தமானது ஆங்காங்கே மக்களிடையே ஊடுருவி வருகின்றது அதற்கு உதவ மத்திய அரசின் பிரதமர் சூரியக்கர் பெரும் அளவில் உதவி வருகின்றது. இதன் மூலம் மின் கட்டணத்தை குறைக்கலாம் அதிகரித்து வரும் வெப்பத்தை சமாளிக்க முடியும். இதைப்பற்றி தொடர்ந்து நாம் பார்ப்போம்.
பிரதமர் சூரியக்கர் யோஜனா நிதி சோலார் அமைப்பு உதவி
அதிகரித்து வரும் வெப்பத்தையும் சமாளிக்க சோலார் திட்டத்தில் இணைய மக்கள் அதிக ஆர்வம் செலுத்த வருகின்றனர் பிரதமரின் நிதி உதவி கொடுக்கும் பிரதமர் சூரியக்கர் யோஜனா சோலார் திட்டத்தில் மக்களை இணைக்க வெகு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருக்கின்றது. மத்திய அரசு வழங்கும் மானியம் அதற்கு முக்கிய உதவியாக இருக்கும். அரசு தற்போது புதிய மாற்றங்களையும் இதில் இணைத்துள்ளது. வீடுகளில் சூரிய ஆற்றல் அமைப்புகள் நிறுவ முன்வரும் மக்களுக்கு எரிசக்தி துறை இரண்டு விதிமுறைகளை அமல்படுத்தியிருக்கின்றது ஒலி மின்கலன்கள் ALMM கொண்டுவரப்பட்டுள்ளது. நுகர்வோர்கள் மானியம் வேண்டாம் என்று கைவிடும் பட்சத்தில் சூரிய ஆற்றல் பெறும் மக்கள் டி சி ஆர் விதிகளில் இருந்து விளக்கினை பெற்றுக் கொள்வார்கள்.
அரசின் மானிய உதவியானது பெருமளவில் நுகர்வோருக்கு உதவி செய்வதன் சோலார் பேனல்கள் நாம் தேர்ந்தெடுக்க நம்முடைய விருப்பங்களுக்கு முக்கியம் கொடுக்கப்படுகின்றது இதன் மூலம் அதிக அளவில் மக்கள் சோலார் பேனல்கள் அமைக்க முன்வருவார்கள் என்று நம்பப்படுகின்றது இது குறித்த விழிப்புணர்வும் நாளுக்கு நாள் பெருக்கம் அடைகின்றன.

