மருத்துவம்

ஆச்சரியம் தரும் விளக்கெண்ணெயின் பயன்கள்

விளக்கெண்ணெய் எடுக்கப் பயன்படும் தாவரத்தின் பெயர் ‘ஆமணக்கு’. நம் நாட்டில் இந்த தாவரம் பரவலாக அதிக இடங்களில் எண்ணெய் தயாரிப்பதற்காக பயிரிடப்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய இந்த வகை எண்ணெய் ஆமணக்கு விதைகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பதிவில் ஆச்சரியம் தரும் ஆமணக்கு எண்ணெயின் பயன்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.     

    இந்த எண்ணெய் ஒரு வித்தியாசமான பச்சை நிறத்திலும் மற்றும் மஞ்சளும் கலந்த நிறமாக இருக்கும். ஏதோ ஒருவகை வாசனையும் கசப்பு சுவையும் மற்றும் குமட்டலை தூண்டும் தன்மை கொண்டது. இந்த எண்ணெய் வைத்து பெயிண்ட், இங்க், தைலங்கள், சோப் முதலிய பொருட்களை தயாரிக்க முடியும்.   

தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை     

1. விளக்கெண்ணெய் உடல், கண், மூக்கு, வாய் இவைகளில் உண்டாகின்ற எரிச்சலை நீக்க பயன்படுகிறது. இதனை கைக்குழந்தை, வயதுடையவர், பிள்ளை பெற்றவர், வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுபவர்களுக்கு எந்த பயமுமின்றி கொடுக்கலாம்.     

2. மலச்சிக்கல் பிரச்சினை தீவிரமாக இருப்பவர்கள் விளக்கெண்ணைய் சில துளிகள் இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் மலச்சிக்கல் பிரச்சினை குணமாகிவிடும்.     

3. விளக்கெண்ணைய் சிறு துளிகளை எடுத்து சொறி, அரிப்பு ஏற்பட்ட இடங்களில் மீது விட்டு நன்கு தடவி வந்தால் தோல் சுருக்கம் மற்றும் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் சரியாகிவிடும்.   

      4. எல்லோருக்குமே தலைமுடி நன்றாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். முக்கியமாக ஒவ்வொரு பெண்ணுக்கும் பட்டு போன்ற அழகான நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். ஆனால் இந்த மாசடைந்த சுற்றுச்சூழலால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஒருவருடைய உணவு பழக்கம், பயன்படுத்தும் பொருட்கள் தான் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது.பொடுகுத்தொல்லை, முடி உதிர்தல், முடி வெடிப்பு, முடி வளர்ச்சி தடைபடுவது போன்ற அனைத்து கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் ஒரு சிறந்த மருந்து விளக்கெண்ணெய். முக்கியமாக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சனையை குணப்படுத்த முடியும். முடி அதிக வறட்சியுடன் இருந்தால் வாரம் ஒரு முறையாவது விளக்கெண்ணெய் மசாஜ் குளியல் எடுத்தால் போதும். இதனால் முடியின் வறட்சி தடுக்கப்படுவதோடு கூந்தல் அடர்த்தியாகவும் இருக்கும்.    

5. இன்றைய காலத்தில் பெரும்பாலானவர்கள் பல மணி நேரம் தொடர்ந்து கணினி முன்பு அமர்ந்து பணிபுரிகின்றார்கள் மற்றும் கைபேசியை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதனால் கண்களின் மீது அதிகம் அழுத்தம் ஏற்படுவதால் கண்ணைச் சுற்றிலும் கருவளையம் ஏற்படுகிறது. இது எதிர்காலத்தில் கண்பார்வை குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட வேண்டுமானால் தினமும் இரவில் சில விளக்கெண்ணெய் துளிகள் கண்களின் மீது தடவிக்கொண்டு உறங்கினால் கண்கள் குளிர்ச்சி அடைவதால் இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.     

6. உடல் சூட்டினால் அல்லது உடலில் பித்த தன்மை அதிகமாகும் நபர்களுக்கு பாதம் வெடிப்பு பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பாதம் வெடிப்பு அதிகம் உள்ளவர்கள் தினமும் உறங்க செல்லும் முன்பு விளக்கெண்ணெய் துளிகள் எடுத்து வெடிப்புகளின் மீது தடவி வந்தால் விரைவில் பாத வெடிப்புகள் நீங்கி விடும்.   

    7. நம்மில் பலருக்கு மென்மையான அழகான சருமம் பெற வேண்டும் என்ற ஆசை உடையவர்களாக இருக்கிறோம்.விளக்கெண்ணெய் சில பொருட்களுடன் சேர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும். இந்த எண்ணெய் கொண்டு பல வழிகளில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும். ஒரு சில வழிமுறைகளை பார்ப்போம்:   * ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவினால் சருமம் வெண்மையாக இருக்கும்.   * ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவற்றை நன்கு கலந்து சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவினால் பொலிவான சருமம் பெற முடியும்.    

8. உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் விரிசல்களை போக்க எந்த ஒரு செயற்கை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதை காட்டிலும் அதிக நன்மை அளிக்கக் கூடியது ஆமணக்கு எண்ணெய் தான். ஆமணக்கு எண்ணெயை உதடுகளில் தேய்த்து சற்று நேரம் நன்கு ஊற விட்டு சிறிது நேரத்திற்கு பின் லிப் பாம் தடவிக் கொள்ளலாம். இவ்வாறு தொடர்ந்து செய்தால் வெடிப்புகள் இல்லாமல் அழகான உதடுகளை பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *