ரஜினியை வைத்து புகழ் தேடும் தமிழக வெற்றிக்கழக ஆதாவ் அர்ஜுனா சும்மா விடுவார்களா எடப்பாடி அண்ணாமலை
தமிழ்நாட்டில் தேர்தல் அலை அடிக்க ஆரம்பித்துவிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாச்சு மக்கள் இடையே யாருக்கு ஓட்டு போடுவது முடிவெடுக்க நேரம் வந்தாச்சு இந்த நேரத்தில் அரசியல் கட்சிகள் ஒவ்வொருவரும் ஒரு பதாகையை கையில் ஏந்தி கொண்டு வீதி வீதியாக வருவார்கள். இப்போது டிஜிட்டல் காலம் என்பதால் டிஜிட்டல் விளம்பரங்கள் ஆங்காங்கே பறக்கின்றது.
தவெக அணில் குஞ்சுகள் அட்டகாசம்

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியானது எதையெதையாவது பேசி தினசரி ஒரு பீதியை கிளப்புவதும் மக்களிடையே நானும் ரவுடிதான் என்கின்ற வேஷத்தை போடுவதிலும் தெளிவாக இருக்கின்றது. புதிதாக ஓட்டு போடுபவர்கள் விஜய் ரசிகர்கள் கண்ணா பின்னா என்று யோசிக்காமல் அணில் குஞ்சுகளாக மாறி தேர்தல் களத்தை ரகளை கிளப்பி வருகின்றனர்.
எப்பொழுதும் தமிழக வெற்றி கழகம் பரபரப்பு
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில். பல ஆண்டுகளாக தேர்தல் களத்தில் நின்று விளையாடிக் கொண்டிருக்கும் எடப்பாடி பன்னீர்செல்வம், சீமான் அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், திமுக போன்ற கட்சிகள் நபர்கள் என்ன செய்வது எப்படி செய்வது என்பதை அறிந்து வைத்து செயல்படுவார்கள். ஆனால் தற்போதைய புதிய கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு தினசரி எதையாவது பரபரப்பாக பேசிக்கொண்டு மக்களிடையே நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்களை வைத்துக்கொண்டு டாப் ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டும். அதைத்தான் அவர்கள் செய்து கொண்டு வருகின்றார்கள்.
திரிஷா விஜய் பரபரப்பு அடங்கிய நிலையில ஆதாவ் அர்ஜுனா ஆரம்பிக்கலாமா
கடந்த வாரங்களாக ட்ரெண்டிங்கில் இருந்து விஜய், திரிஷா, விஜய் மனைவி சங்கீதா இடையே இருந்த விவாகரத்து, உறவு தொடர்பு ஒதுக்கி வைத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் மற்றும் வேஷங்கள் பல வெளிவந்து ரசிகர்கள் பலர் ஆதரவும் சிலர் முறையான ஆட்சேபனையும் சிலர் வருத்தமும் தெரிவித்து கொண்டிருக்க விஜயும், திரிஷாவும் இணைந்து திருமணத்திற்கு சென்று அதற்கு ஆமாம், சாமி என்று பிள்ளையார் சுழி போட்டு வைத்தார்கள் உடனே பேச்சுக்கள் எல்லாம் ஏகபோகமாக பறந்து சற்று ஓய்ந்திருக்கின்றது தற்போது விஜய் ,திரிஷா திருமணத்திற்கு த்ரிஷாவின் அம்மா லைக் ட்ரெண்டிங்கில் இருக்க அடுத்து ஆரம்பிக்கலாமா என்று ஆதவ் அர்ஜுனா உள்ளே நுழைந்து இருக்கின்றார்.
தமிழக வெற்றி கழகத்தின் ஆதவ் அர்ஜுனா
ஆதார் அர்ஜுனா தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய புள்ளியாக இருக்கின்றார் அவருடைய பேச்சுக்கள் ஒரு சில சமயம் ஓகே என்றாலும் பல சமயம் யாரப்பா இவர் என்று யோசிக்கும்படியான செயல்களில் ஈடுபடுகின்றார். தற்போது ரஜினிகாந்த் அவர்களை இழுத்து தமிழ்நாடு முழுவதும் பேமஸ் ஆகிவிட்டார் இது தேவை தானா என்பதைப் போல எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மற்றும் அண்ணாமலை அவர்கள் கண்டித்து இருக்கின்றனர்.
ஆதாவ் அர்ஜூனா பேச்சு
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் திமுகவைப் பார்த்து பயப்படுவதாகவும் அதன் காரணமாகவே அரசியல் களத்தில் இருந்து விலகியதாகவும் தெரிவித்திருக்கின்றனர். அவருடைய இந்த பேச்சு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் மூலம் கண்டனத்தை கொண்டு வந்திருக்கின்றது அரசியலில் வருவது விலகுவது ஆகியவை அவரவர் விருப்பத்திற்கு உள்ளானது அதில் காரணத்தை சொல்லியே ரஜினிகாந்த் அவர்கள் அரசியலை விட்டுள்ளார். இதனை பேசுவது நாகரீகம் அற்ற பேச்சாகவும், கவன ஈர்ப்புக்காக என்ன செய்கின்றோம் என்பதை யோசிக்காமல் செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கிறார். ஆதாவ் அர்ஜுனா பேசிய பேச்சை அண்ணாமலையும் மாமனார் வீட்டு பணத்தில் கட்சிகள் பல மாறி பேசி வருவது இள்ளுசன் செயல்பாட்டால் இப்படி பேசி இருக்கின்றார் என்றும் தெரிவித்திருக்கின்றார். ஆனால் யார் தன் மீது கல்லையும் மண்ணையும் வீசினாலும் அமைதியை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு சமீப காலங்களில் ரஜினிகாந்த் செயல்படுகிறார் என்பதை பார்க்க முடிகின்றது.

