பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம் ஸ்பெஷல்
பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் ஆலயம் விநாயகரின் ஐந்தாம் படை வீடாக கருதப்படுகிறது. விநாயகருக்கு தேர் திருவிழா நடக்கும் ஒரு சில கோவில்களில் இதுவும் ஒன்று. அப்பொழுது விநாயகருக்கும் சண்டிகேஸ்வரருக்கு தேர்தல் இழுக்கப்படுகின்றன. கல்வியில் மேன்மை பெற, வறுமை நிலை மாற, குழந்தை பாக்கியம் பெறுவதற்காக பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.
பிள்ளையார்பட்டி
அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிள்ளையார்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ளன. பிள்ளையார்கான தேர் இழுக்கும் போது தேரின் ஒரு வடத்தை ஆண்களும், மற்றொரு வடத்தை பெண்களும் பிடித்து தேரை இழுக்கின்றனர். சண்டிகேஸ்வரரின் தேரை பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே இழுக்கின்றனர். இக்காலத்தில் கோவிலில் ஒன்பது நாட்களுக்கு விழா நடத்தப்படுகிறது.

பிள்ளையார்பட்டி ஒன்பது நாள் விழா
ஒன்பது நாள் விழாவின் இறுதி நாளில் பிள்ளையாருக்கு 80 கிலோ சந்தன காப்பு சாற்றப்படுகிறது. ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே செய்யப்படும் இந்த அலங்கார காட்சியை காண்பதற்காகவே பக்தர்கள் பெருமளவில் இக்கோவிலுக்கு வருகை தருகின்றனர். பிள்ளையார்பட்டி கோவில் சிறப்பாக விநாயகர் சதுர்த்தி தினத்தன்று முக்குருணி அரிசியை கொண்டு தயாரிக்கப்படும். மிகப்பெரிய கொழுக்கட்டை விநாயகருக்கு படைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்பட்டு பிறகு, அக்கொழுக்கட்டை ஊர்களுக்கும், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
மேலும் படிக்க : சக்தி வாய்ந்த கணபதி மூல மந்திரங்கள்
பிள்ளையார்பட்டி கோவிலின் வரலாறு
அர்ஜுன வன திருத்தலங்கள் தென்னிந்தியாவில் நான்கு இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் மூன்றும், ஆந்திர மாநிலத்தில் ஒன்றும் இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் மூன்றில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலும் ஒன்று. கல்வெட்டுகளை நோக்கினால் இந்த கோவிலின் வரலாறு தெரியவரும். இதன் பழமை என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் இந்த கோவிலின் கல்வெட்டுகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 1600 ஆண்டுகள் பழமையான இக்கோவில் ஒரு குடைவரைக் கோவிலாகும். இந்தவகை கோவில்களை கட்டுவதில் சிறந்தவர்களாக விளங்கியவர்கள் பல்லவ மன்னர்கள். அவர்கள் வழிவந்த மகேந்திரவர்மன் பல்லவ மன்னனால் கட்டப்பட்டதே இந்த கோவில் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இக்கோவிலின் மூலவராக விநாயகர் கற்பக விநாயகர் என அழைக்கப்படுகிறார்.
மேலும் படிக்க : மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்தி
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்
‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் வடிவத்தை கொண்டவர் விநாயகப்பெருமான். நமது நாட்டில் மிகப் பழமையான காலம் தொட்டே விநாயகர் வழிபாடு முறை இருந்து வருகிறது. நமது வினைகள் அனைத்தையும் விலக்குபவர் விநாயகர். அப்படி வேண்டும் பக்தர்களின் அனைத்து வினைகளையும் தீர்க்கும் பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயம்.