சினிமாசினிமா பாடல்கள்செய்திகள்தமிழகம்தேசியம்

5 தேசிய விருதுகளை சூரரைப் போற்று திரைப்படம் பெற இவர்தான் காரணம்

தமிழ் திரையுலகில் எந்த படத்திற்கும் இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்ததில்லை தேசிய விருது பெறுவது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. அதற்கு எவ்வளவு கடினமான உழைப்பும் திறமையும் தேவை என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு இருக்கையில் சூரரை போற்று திரைப்படம் ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து தேசிய விருதுகளை அசால்டாக தட்டி சென்றது. அதற்கு முக்கிய காரணம் அப்பிடத்தில் நடித்த அனைவரின் கடின உழைப்பும் மட்டுமே காரணம்.

சூரரைப் போற்று திரைப்பட ஹீரோ சூர்யா பல்வேறு படங்களில் பல காலங்களாக நடித்து வருகிறார். அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் மக்களுக்கு ஒரு கருத்தை சொல்லும் படமாகவே உள்ளது ரீசன்டாக இவர் நடித்த படங்கள் அனைத்தும் நிஜ வாழ்க்கையில் நடந்து வருகிறது என்று செய்தி வைரலாகி வந்தது. ஏழாம் அறிவு திரைப்பட கதையாக கொரோனா வந்தது மேலும் பல படங்கள் இதேபோன்று அவர் நடித்தது நிஜமாக நடந்து வருகிறது என்று சமூக வலைத்தளங்களில் கூறி வந்தனர்.

மேலும் படிக்க : முன்னணி நடிகர்கள் செய்யாத காரியத்தை முன்வந்து ஜெயம் ரவி செய்துள்ளார்

இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான தேசிய விருதை சூர்யா மற்றும் அபர்ணா ஆகியோர் தட்டிச் சென்றனர். அபர்ணாவிற்கும் இது மிகப்பெரும் வெற்றியாகும். பல காலங்களாக அதிக படங்களில் நடித்து வரும் முன்னணி ஹீரோயின்களுக்கு கூட இத்தகைய அங்கீகாரம் கிடைத்ததில்லை அப்படி இருக்கையில் இளம் வயது ஹீரோயினி அபர்ணாவுக்கு இவ்விருது கிடைத்தது மிகப்பெரும் சாதனையாகும். அந்த விருதிற்கு இவர் நிச்சயம் தகுதியானவர் தான் ஏனென்றால் அந்த படத்தில் அவர் அவ்வளவு அழகாக எதார்த்தமான கேரக்டரில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் அதேபோல் தான் சூர்யாவும்.

மேலும் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் சிறந்த தயாரிப்பு வசனம் ஆகியவற்றிற்கான விருதையும் சூரரைப் போற்று திரைப்படம் பெற்றுள்ளது. மேலும் சிறந்த பின்னணி இசை அமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷுக்கு கிடைத்துள்ளது அதுவும் சூரரைப் போற்று திரைப்பட பாடலுக்காக தான் இந்த தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.இப்படி அசால்ட்டாக ஐந்து தேசிய விருது சூரரைப் போற்று திரைப்படத்திற்காக கிடைத்துள்ளது இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுபோன்ற சாதனைகளை சூர்யா பெற வேண்டும் என்று அனைவரும் ஆசைப்பட்டு அவரை பாராட்டு மழையில் நனைய வைத்து உள்ளனர் அவரது ரசிகர்கள்.

மேலும் படிக்க : ரசிகர்களை துடிதுடிக்க வைத்த மாளவிகா

கடின உழைப்பும் நேர்மையான திறமையும் இருந்தால் அதற்கான வெகுமதி எப்பொழுதாவது கண்டிப்பாக உன்னை வந்தடையும் என்பதற்கு சூர்யா ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *