செய்திகள்தேசியம்

திருப்பாவை திருவெம்பாவை பாடல் 9

திருப்பாவை, திருவெம்பாவை சிவபெருமான், அருள் கிடைக்கப் பெருமாள் வழிப்பாட்டுக்காக செய்வது வழக்கமாகும்.

9. திருப்பாவை

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய் மாமீர்! அவளை யெழுப்பீரோ? உம் மகள்தான் ஊமையோ? அன்றி செவிடோ அனந்தலோ ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்!

பொருள்:

மாணிக்கக் கற்களால் அழகிய மாடத்தில் அழகிய தூபம் மணக்க அங்குப் போடப்பட்டுள்ள மஞ்சத்தில் உறங்கும் மாமன் மகளே கதவை திறக்க மனமில்லையோ மகள் பதில் ஏதும் சொல்லாமல் நித்திரையில் இருக்கிறாள்.

திருவெம்பாவை 9.

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே!

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே! உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம் உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்காவோம்;

அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்; இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்!

பொருள்:

பிரபஞ்சம் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடும் எம்பெருமானே, நீவிர் முன்னரே தோன்றிய பழமையான எல்லா பொருட்களுக்கும் முற்பட்ட பழம் பொருள். அவ்வாறே பின்னே தோன்றிய புதுமைப் பொருட்களுக்கெல்லாம் புதுமையாக தோன்றும் தன்மையன்.

இறைவனாக நாங்கள் அடியார்களாவோம், ஆதலால் உன்னுடைய அடியார்களாவோம். ஆதலால் உன்னுடைய அடியார்களது திருவடிகளை வணங்குவோம்.

இறைவனாகப் பெற்ற நாங்கள்;

உன் சிறந்த அடியார்களாவோம். சிவனடியார்களின் பெருமைகளை போற்றுவோம் திருவடிகளை வணங்குவோம். அங்ஙனமே அவர்களுக்கே உரிமையுடையவர்களாவோம், அந்தச் சிவனடியார்களே எங்களது கணவர்கள் ஆவார்கள். அவர்கள் விரும்பிக் கூறும் முறையிலே அடிமைப் பணி செய்வோம். எங்கள் அரசே! இந்த வகையான வாழ்க்கையை எங்களுக்கு நீங்கள் அருளுவீர்களானால் எந்தக் குறையும் இல்லாதவர்களாவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *