அடுத்த மாதம் முதல் மின் பற்றாக்குறை -எச்சரிக்கும் மத்திய அரசு
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் மாலை நேரத்தில் மின் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என மத்திய மின்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது
கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் பொழுது மின் தேவை இந்த ஆண்டு 19, 679 மெகா வாட்டில் இருந்து 19,822 ஆக உயர்ந்திருக்கிறது
கடும் வெயிலின் தாக்கத்தால் அதிக ஏ.சி. பயன்பாடு மற்றும் உற்பத்தி குறைவு காரணமாக, தெலுங்கானா, ஆந்திரா போன்ற பிற தென் மாநிலங்களுடன் சேர்ந்து தமிழகத்திலும் மின்தேவை உயர்ந்துள்ளதால் மின் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளாதாக தெரிவிக்க பட்டுள்ளது

