சட்ட பேரவை கூட்ட தொடர்- எதிர் கட்சியினர் செய்த செயல்” வாய தொறங்க CM” திரையில் நாயகன் தரையில் வில்லன்
தமிழக வெற்றி கழகத்தின் முதல் சட்டப்பேரவை தொடர் ஜூன் 18 இன்று நடைபெற்றது, இது தமிழ்நாட்டின் 17 வது சட்டபேரவையின் முதல் கூட்ட தொடர் ஆளுநர் ராஜேந்திர விஷநாத் அர்லோகரால் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்க பட்டது, அதற்கு முன்னர் முதலமைச்சர்கள் விஜயை கண்டித்து திமுகவினர் கோஷங்களையும் பதாகைகளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர், இந்த போராட்டத்தால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் கூச்சல்களும் குழப்பங்களும் நிலவியது போராட்டங்கள்
எதிர்க்கட்சியினரின் கருப்பு போராட்டம்
தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தாவீகா அரசியல் நடவடிக்கைகள் மற்றும் சில கொள்கை முடிவுகளில் அரசு தன்னிச்சையாக முடிவெடுப்பதாக குற்றம் சாட்டை திமுகவினர் கருப்பு பட்டை பட்டையை அணிந்து கொண்டு சட்டப்பேரவைக்கு சென்றனர்,
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்ற பிறகு நடக்கும் தொடர் கொலைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் போன்றவற்றிற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து ” வாயை தொறங்க CM”, “கதறல் கேட்குதா “, ரீல்ஸ் இங்கே REAL எங்கே, ” திரையில் நாயகன் தரையில் வில்லன் என்று பதாகைகளை ஏந்தியபடி முதல்வர் விஜய் உரிய விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றார்.
இந்த போராட்டத்திற்கு காரணமாக,தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை புகார்கள் மற்றும் மின்வெட்டு தொடர்பான பிரச்னைகள் போன்றவை பேசு பொருளாக உள்ளது மேலும் சட்டபேரவையில் கலந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், மற்றும் திமுகவினர் கருப்பு பேட்ச் அணிந்து கூட்ட தொடரில் கலந்த கொண்டனர்

