சினிமாசெய்திகள்தமிழகம்

விஜய சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூகவலைத்தளத்தில் கொடுக்கப்பட்ட பாலியல் மிரட்டல் என்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. பெரும் பாதிப்பை உண்டு செய்துள்ளது. இலங்கை அணி கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு படமான 800 படத்தில் நடிக்க விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆயுத்தமாகி வந்த நேரத்தில் அந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ள பலர் அறிவுரை விஜய சேதுபதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பெண்ணுக்கு மிரட்டல்

விஜய்சேதுபதி யோசித்துக் கொண்டிருக்க முத்தையா முரளிதரன் விஜய் சேதுபதிக்கு அறிவுரையாக படத்திலிருந்து விலக அறிக்கை கொடுத்து இருக்கின்றார். இதனை அடுத்து விஜய் சேதுபதிக்கும் அப்படத்தில் இருந்து விலகி இருக்கின்றார்.

சைபர் கிரைம் விசாரிப்பு

சமூக வலைத்தளத்தில் விஜய் சேதுபதியின் மகளுக்குப் பாலியல் மிரட்டல் கொடுத்த நபரைச் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தக் கருத்துக்கு எதிராகப் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் பெருகி வருகின்றது. இது பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கின்றது.

மேலும் படிக்க : தாமிரபரணி படம் பாடல் வரிகள் கருப்பான கையாலே..

சாமனிய பெண்களின் நிலை என்னவாகும்

பிரபலங்களின் பிள்ளை பெண் பிள்ளைகள் பாலியல் மிரட்டலுக்கு உள்ளாவது என்பது தவறு செய்யும் நபர்களின் பெரும் அசட்டுத்தனமான தைரியத்தை காட்டுகிறது, தவறு செய்கிறோம் என்ற அச்ச உணர்வே இல்லாத இதுபோன்ற மனிதர்களை நாம் என்ன செய்வது, இனிமேல் சாமானிய வீட்டு பிள்ளைகள் எல்லாம் எப்படி வாழ்வார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது.

பெண்கள் பாதுகாப்பு

பெண்களைப் பேசிக் கிடைப்பது என்ன ஏன் இவ்வளவு வக்கிரம் என்ற கேள்வி சமூகத்தில் எழுந்துக் கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் சாமானியனைப் பற்றி யோசிக்க வேண்டும். எதிர்காலத்தில் சாமானியர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது.

நமக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றாற்போல் பயன்படுத்திக் கொள்கிறோம் என்ற சந்தேகம் எழுகின்றது. இந்த நாட்டில் பெண்கள் வாழ்வதற்கு முழு பாதுகாப்பு இல்லை என்று ஏற்கனவே உலக புள்ளியல் பட்டியல்கள் நம்மைக் கேவலப்படுத்தி விட்டன. போதாக்குறைக்கு இந்த வக்கிரமும் நடக்கின்றது. என்ன சொல்ல இன்னும் என்னென்னவெல்லாம் நடக்குமோ என்று கேள்விகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.

மேலும் படிக்க : அன்புள்ள மன்னவனே ஆசை…. மேட்டுக்குடி படம்

தண்டனைகள் கடுமையானதாக இருக்கும்

இது போன்ற தவறுகள் இனி மீண்டும் நடக்க கூடாது பெண்கள்குறித்து யார் என்ன சொன்னாலும் உடனடியாக அதற்கான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அவை கடுமையானதாக இருக்க வேண்டும் மீண்டும் இதுபோல் செய்தால் மன்னிப்பு கிடையாது என்ற முறையில் இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *