ஆன்மிகம்ஆலோசனை

வியாழக்கிழமை என்ன செய்தால் செல்வம் அதிகரிக்கும்

நவக்கிரகங்களில் குருபகவான் சுப கிரகம் என்று அழைக்கப்படுகிறார். வியாழக்கிழமைகளில் தட்சிணா மூர்த்திக்கும், குரு பகவானுக்கும் விரதம் இருப்பது மிகவும் விசேஷம்.

இதனால் குருவின் தோஷம் நீங்கி, குருவின் அருளை முழுமையாகப் பெற முடியும். குருவிற்கு உகந்த நாள் வியாழன். குறிப்பிட்ட விஷயங்களை வியாழக்கிழமைகளில் செய்து வருவதால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும்.

வியாழக்கிழமை என்ன செய்தால் செல்வம் அதிகரிக்கும் என்றால் வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிவது. குரு பகவானுக்குரிய ஸ்லோகங்களைச் சொல்லி வருவது. ஒவ்வொரு வியாழக்கிழமை என்றும் தவறாது செய்து வருவோர். வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று வாழ்வார்கள் என்பது நிச்சயம்.

குருபகவானுக்கு மஞ்சள் நிற மலர், முல்லை மலரை வாங்கி சாற்றி வழிபடலாம். சுண்டல் மாலை கட்டி குருபகவானுக்கு சாற்றி வழிபடலாம். சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்தபின் விளக்கேற்றி விஷ்ணு பகவானை வணங்க வேண்டும்.

அன்றைய தினம் மஞ்சள் நிற பொருட்களை தானம் வழங்குவதால் செல்வமும், அதிர்ஷ்டமும் கொட்டும். இன்றைய தினம் சிவபெருமானுக்கு மஞ்சள் லட்டு படைத்து வணங்கி வருவதால் அதிர்ஷ்டமும் செல்வமும் வந்து சேரும்.

வியாழக்கிழமைகளில் வாழைப்பழத்தை தானம் வழங்கி வருவதால் ஒருவரது வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கச் செய்யும். விஷ்ணு பகவான் மகிழ்ந்து வீட்டில் செல்வம் பெருக செய்வார் என்று சொல்லப்படுகிறது.

ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை மனதில் சொல்லிக் கொண்டே இருப்பதால் வீட்டில் தரித்திரம் நீங்கி செல்வம், அதிர்ஷ்டம், சந்தோஷம் போன்றவை அதிகரிக்கக் செய்யும்.

இவ்வாறு குருபகவானை ஒவ்வொரு வியாழக்கிழமையும் தவறாது வழிபட்டு வருவதால் குருவினால் ஏற்படக்கூடிய தோஷம் நீங்கி அவரின் அருள் பரிபூரணமாக பெறலாம்.

நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டுக் போவதால் ஏற்படும் தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *