சினிமா

சூர்யா-கார்த்தி வீட்டில் அடுத்த குவா குவா சத்தம்

கைதி நடிகர் கார்த்தியின் மனைவி இரண்டாவது குழந்தையை கருவுற்றிருக்கிறார். பிரபல நடிகர் சிவகுமாரின் மகனும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி திரையுலகில் பட்டையைக் கிளப்பும் படங்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார். தந்தை தமையன் என்று புகழ் தேடாமல் தனக்கென்று புகழைத் தேடிக் கொண்ட நடிகர்.

  • கார்திதியிற்கு அடுத்த குழந்தை பிறக்க இருக்கிறது.
  • கார்த்திக்கின் மனைவி ரஞ்சனி இரண்டாவது கருவுற்றிருக்க இருவரும் இப்பொழுது எங்கு இருக்கிறார்கள் தெரியுமா!
  • மகளா! மகனா! எந்த குழந்தையாக இருந்தாலென்ன குழந்தை தானே.
  • கார்த்தியின் திரையுலக காலம் பரபரப்பாக அமைந்திருக்கும் நிலையில் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு நேரம் செலுத்த முடியுமா!
  • பொன்னியின் செல்வன் நடித்துக் கொண்டிருக்கும் கார்த்தியின் அடுத்த அடுத்த படங்கள்.

கார்த்தி

பருத்திவீரனில் வீரனாக நடித்த கார்த்தி திரையுலக பயணத்தை தனித்துவமாக அமைத்துக் கொண்டார். ஒவ்வொரு கதையையும் நேர்த்தியாக தேர்ந்தெடுத்து அருமையான படங்களை நடித்து தனித்துவமான நடிகர்.

ரஞ்ஜனி கார்த்தி

2011ல் கார்த்தி-ரஞ்சனி என்பவரைத் திருமணம் செய்து 2013 பெண் குழந்தை பிறந்து என பெயர்சூட்டி வளர்த்து வருகின்றனர். இரண்டாவது குழந்தையை கருவுற்றிருக்கும் இந்த ஜோடி 3 மாதங்கள் சென்னையில் இருந்தார்கள். தற்போது கொடும்பாளயத்தில் மே மாதம் முதல் இருந்து வருகின்றனர்.

மேலும் படிக்க : கில்லியான ராஜமாதா வில்லியான நீலாம்பரியின் பிறந்தநாள்

கைதி நாயகன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் கார்த்தி முன்னணி கதாநாயகனாக நடித்து பட்டையைக் கிளப்பியதை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்திலும் நடிக்க உள்ளார். கைதிக்கு போட்டியாக வெளியான ஹீரோ திரைப்படத்தின் இயக்குனருடன் அடுத்த படம்.

பி. எஸ். மித்ரன்

சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தின் இயக்குனர் பி. எஸ். மித்ரன். இந்தப் படத்திற்கு முன்பு விஷால் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த இரும்புத்திரை படத்தை இயக்கியவர். இவரின் கதைக்கும் இயக்கமும் பிடித்த கார்த்தி இவரிடம் கதையை கேட்டு ஓகே சொல்லியுள்ளார்.

மறுபடியும் கொம்பன் கூட்டமா!

கார்த்தியின் கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா மீண்டும் அடுத்த படத்திற்காக இயக்குனர் நடிகர் ஜோடி இணைகிறது. தொலைபேசி மூலமாக கதையின் ஒரு வரியை மட்டுமே கேட்டு புளித்துப் போன காட்சி மறுமொழி கூறாமல் சரியென்று கூறியுள்ளார். முத்தையா இயக்கத்தில் இப்படத்தில் தம்பி நடிக்க அண்ணனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

பொண்ணியின் செல்வன்

மணி ரத்னம் பிரம்மாண்ட இயக்கத்தில் படப்பிடிப்பில் இருக்கும் படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கியின் மாபெரும் கதையான பொன்னியின் செல்வன் திரைக்கு வருவதற்காக அனைவரும் காத்திருக்கின்றனர். இக்கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார் அமரர் கல்கி. பிரமாண்ட இயக்குனரின் பிரபல நடிகர் கூட்டத்தால் க்ர்த்தியும் நடித்து வெளிவர இருக்கும் பிரம்மாண்ட திரைப்படம்.

கார்த்தி சார் ரிலீஸ் 2020 ஆ இல்ல 2021 ஆ! எது படமா பாப்பாவா!!! ரெண்டும்தான் மக்களே…

மேலும் படிக்க : ரசிகர்களின் நேஷனல் கிரஷ் :- சூடேற்றும் ராஷ்மிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *