செய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்வணிகம்

நினைவுகளை நினைக்க வைக்கும் சிங்கப்பூர் பிளாசா நம்ம கோவையில்..

நினைவுகளை நினைக்க வைக்கும் பரிசு பொருட்கள் விற்பனையில் தமிழகத்தில் தனி இடம் பிடித்துள்ள சிங்கப்பூர் பிளாஸா கோவையில் இன்று தனது 6வது கிளையை அவினாசி சாலையில் துவக்கியது,.

நினைவுகளை எடுத்து கூறும் பரிசு பொருட்கள் விற்பனையில் தங்களுக்கென தனி இடம் பிடித்துள்ள சிங்கப்பூர் பிளாஸா, தமிழத்தில் தங்களது கிளையை விரிவு படுத்தும் விதமாக, கோவை அவினாசி சாலை, கேஎம்சிஹெச் மருத்துவமனை அருகே தனது 6வது கிளையை இன்று துவங்கியது, இதனை கேஎம்சிஹெச் மருத்துவமனையின் இயக்குநர் அருண் பழனிச்சாமி ரிப்பன் வெட்டியும் குத்துவிக்கேற்றி வைத்தும் துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய, சிங்கப்பூர் பிளாஸா உரிமையாளர்களான அன்சர் அலி, அக்பர் அலி, இம்ரான் ஆரிப், யாசிர், ஆகியோர் கூறும் பொழுது.
மனித வாழ்வில் நினைவுகள் என்பது ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத ஒன்றாகும், இதனை நினைவு வைத்து கொள்ளும் வகையில் சிறிய சிறிய அன்பளிப்புகள், பரிசு பொருட்கள், கிப்ட் வகைகள் பெரிதும் முக்கியமாக உள்ளது இவற்றை தரமானதாகவும், மேலை நாட்டு தயாரிப்புகளை உள்ளூரில் சந்தை படுத்தும் வகையில் சிங்கப்பூர் பிளாஸா, தஞ்சாவூர், ஈரோடு, திருச்சி, திருப்பூர், பள்ளபட்டி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து இன்று கோவையில் 6வது கிளையை துவக்கி உள்ளதாகவும் இங்கு பலவிதமான பரிசு பொருட்கள், லக்கேஜ் பேக்கள், டிராலி பேக், சப்பல் வகைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், கிப்ட் வகைகள், உள்ளிட்ட பல உள்ளது மேலும் வெளிநாடுகளில் இருந்து தரமான, பரிசு பொருட்கள் கைவினை கலைநய மிக்க பொருட்கள் என இங்கு உள்ளது என்று தெரிவுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *