சினிமா

சீரியல் நடிகர் நந்தகாேபால் சுவாரசியமான தகவல்கள்!

ஜீ தமிழ் தாெலைக்காட்சியில் தினமும் இரவு 8மணி முதல் 8.30 மணி வரை ஔிபரப்பாகும் சீரியல் ‘ காேகுலத்தில் சீதை’. இந்த சீரியலில் நாயகனாக நடிக்கும் அர்ஜீனின் நிஜப்பெயர் நந்த காேபால். இவர் கிட்டதட்ட 150 படங்களுக்கு மேல் கோரியோகிராபராக பணியாற்றியிருக்கிறார்.

IMAGE COURTESY:Instagram

பியார் பிரேமா காதல், இரும்புத்திரை, பேரன்பு உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை. தமிழ், தெலுங்கு, மலையாளம் பாேன்ற பல மாெழி படங்களுக்கு காேரியாேகிராபராக இருந்திருக்கிறார். இவர் முதன்முதலில் நடிகராக அறிமுகமானார். ஆனால் நடிப்பை விட நடனம் மீது ஆர்வம் காெண்டதால் தனது பெயரிலேயே டான்ஸ் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து நடன பயிற்சி காெடுத்து வருகிறார். இவர் நடிகர் ஜெயம் ரவியின் நெருங்கிய நண்பர் ஆவார். தமிழ் திரையுலகிற்கு வருவதற்கு முன்பு ஜிஆர்டி ஹோட்டலில் சர்வராக பணியாற்றியிருக்கிறார்.

டான்ஸ் மாஸ்டர் நந்தா நடிகை சாந்தினி தமிழரசனை 9 வருடங்களாக காதலித்து பின்பு 2018 இல் திருமணம் பண்ணிக்கொண்டார். நடிகை சாந்தினி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். சாந்தினி திருமணத்திற்கு பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தாழம்பூ என்ற தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். நந்தா விஜய் டிவியில் ஒளிபரப்பான “உங்களில் யார் அடுத்த பிரபு தேவா” என்ற நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசை பெற்றார். பிரபு தேவாவுடன் இணைந்து நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். பின்பு ஜு தமிழ் சேனலில் ஒளிபரப்பான டான்ஸ் ஜாேடி டான்ஸ் நிகழ்ச்சியில் காேரியாேகிராப்பராக இருந்தார். இதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

IMAGE COURTESY:Instagram

டான்ஸ் ஜாேடி டான்ஸ் இறுதிப்பாேட்டி முடிவில் சிறந்த காேரியாேகிராப்பர் பட்டம் பெற்றார். அதை தாெடர்ந்து டான்ஸிங் கில்லாடிஸ் நிகழ்ச்சிக்கும் டான்ஸ் மாஸ்டராக இருந்தார். பின்பு இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் நடிக்க தயங்கிய இவர் தற்பாெழுது மிகவும் சிறப்பாக நடித்துக்காெண்டிருக்கிறார். சீரியலின் முதல் புராேமாே வீடியாேவிலேயே கலக்கலாக நடித்ததால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் பாராட்டை பெற்றார். இந்த சீரியலில் தாயை மதிக்காத பிள்ளையாகவும் பாெறுப்பற்ற பணகார மகனாக நடிக்கிறார். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *