மருத்துவம்வாழ்க்கை முறைவாழ்வியல்

அறிவோம் அரியவகை வீட்டு மருத்துவம்! உடல் இளைக்க

உடல் ஆரோக்கியம் என்பது எப்பொழுதும் அவசியம் ஆகின்றது. உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது ஒருவன் தான் நினைத்த இலக்கை தடையில்லாமல் அடைய முடியும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் அதுபோல் உடல் ஆரோக்கியம் திடகாத்திரமான வலிமை மற்றும் தெளிவான மனது அனைத்திற்கும் அவசியம் ஆகும்.

ஊமத்தை இலையில் உயர்வு அறிவோம்

உடம்பில் எங்காவது வெளிப்புறமாக கட்டிகள் இருந்தால், ஊமத்தை இலையில் சுத்தமான செக்கில் அரைக்கப்பட்ட விளக்கெண்ணெய் தடவி, பின்னர் லேசாக வதக்கி, கட்டியின் மேல் வைத்து, சுத்தமான வெள்ளை நிற பருத்தி துணியில் கட்டுப்போட்டு, இரண்டு முதல் மூன்று மணி நேரம் வைத்து பிறகு பிரிக்க வேண்டும்.

கட்டிகள் போக்கும்

ஊமத்தை இலையில் இருக்கும் உறுதியான மருத்துவத்தன்மையை நன்றாகப் பெற நாம் இரவில் தூங்கும் முன்பு கட்டிப் பகுதியில் கட்டுப் போட்டு காலையில் பிரிக்கலாம் அதனால் உடனடியாகப் பலன் பெறலாம்.

இப்படி தினமும் செய்து வந்தால் எப்பேர்பட்ட கட்டிகள் இருந்தாலும் விரைவாக இயற்கை முறையில் குணமாகும். இத உடலுக்கு நல்ல ஆற்றல் கொடுக்கும் ஊமத்தை இலையில் இருக்கும் உயர்ந்த மருத்துவப் பண்பை ஊர் அறிய வேண்டியது அவசியமாகின்றது.

உடல் மெலிய இயற்கை வைத்தியம்.

உடல் இழைக்க எளிய வகைப்பானம் குடியுங்கள். இது உடலுக்கு ஆற்றல் கொடுக்கும் மற்றும் சக்தியை வீணாக்கமல் சக்கையை குறைக்கும் மற்றும் உடல் இயற்கையான ஆற்றலோடு செயல்படும். குதிரைப் போல் சீராக இயங்க உடல் இழைத்து சிக்கென இருங்க இது போதுமுங்க

கொள்ளுச்சாறு கொழுத்த உடம்பை குறைக்கும்

கொள்ளு 100 கிராம் அளவு எடுத்துக் கொண்டு 15 நிமிடம் முதல் அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

காளை மாலை கொள்ளு ரசம்

பிறகு ஒரு லிட்டர் தண்ணீரில் நன்றாக வேக வைத்து, வடிகட்டி, தண்ணீரை மட்டும் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகள் குடித்து வந்தால் உடல் மெலியும். கொள்ளைச்சாறு குடிக்கும் பொழுது உடல் இளைப்பு மட்டுமல்லாமல் உடலில் உள்ள சளிக்கழிவை போக்கச் செய்யும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *