ஆரோக்கியம்செய்திகள்

அஜீரணம், குடல் புண்னை போக்கும் பாட்டி வைத்தியம்…!

🌟அஜீரணம் :-
ஒரு டம்ளர் தண்ணீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து, ஆறவைத்து, வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
🌟 குடல்புண்:-
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல்புண்
ஆறும்.
🌟நெஞ்சு சளி:-
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைக்கவும். பின் ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
🌟தலைவலி:-
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம் சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
🌟தொண்டை கரகரப்பு :-
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

🌟தொடர் விக்கல் :-
நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
🌟வாய் நாற்றம் :-
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
🌟உதட்டு வெடிப்பு :-
கரும்புச் சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
🌟வாயு தொல்லை :-
வேப்பம் பூவை உலர்த்தி, தூளாக்கி வெந்நீரில் போட்டு உட்கொள்வதினால் வாயுத்தொல்லை நீங்கும்.ஆறாத வயிற்றுப் புண் நீங்கும்.

🌟வயிற்று வலி:-
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
🌟மலச்சிக்கல்:-
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

குறிப்பு:- இவை அனைத்தும் பொதுவான தகவல்கள், மருத்துவரை அனுகி அவரின் பரிந்துரையின் பேரி மருத்துக்களை உட்கொள்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *