செய்திகள்

மீண்டும் ஊரடங்கு:- மாநில அரசு அதிரடி..!

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தப்போவதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து அந்தந்த மாநிலங்கள் காட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா மற்றும் திரிபுராவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வர திரிபுரா அரசு திஒட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் 20 ஆம் தேதி வரை (பிப்ரவரி 20 மாநிலத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும், இதேபோன்று திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் 50 சதவீத பேருடன் இயங்க வேண்டும் என்றும், 50 சதவீதத்துடன் இரவு 10 மணி வரை உணவகங்கள் இயங்கவும் அனுமதிக்கப்படும் எனவும் திரிபுரா அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம், அனைத்து அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்கள் வருகையுடன் செயல்பட வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் மாநில அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *