செய்திகள்தேசியம்ராணுவம்

இந்திய சீனா எல்லை விவகாரம் ஐந்து அம்ச உடன்படிக்கை

இந்தியா சீனா பிரச்சனையைத் தீர்க்க இருநாடுகளும் தங்கள் பாதுகாப்பு அமைச்சர்கள் ரஷ்யாவில் பேசியுள்ளனர். மேலும் பிரிகேடர்கள் அளவிலான பேச்சு வார்த்தையும் இன்று நடைபெற்றது. பேச்சுவார்த்தை வாயிலாக முடிவுக்கு வந்துள்ளனர்கள்

மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் மற்றும் பிரிகேடர் அளவிலான பேச்சுவார்த்தையை அடுத்து 5 அம்ச கொண்ட உடன்படிக்கை வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி அதனை இரு நாடுகளும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

எல்லை பிரச்சனைக்குத் தீர்வு காண இரு நாடுகளுக்கிடையே வைக்கப்பட்ட 5 அம்ச உடன்பாடுகள் படி இரு நாடுகளான இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சனையானது மிக நீண்டு கொண்டே செல்கின்றது. இந்தியாவில் தார் சாலை அமைத்தல் எல்லைப் பகுதியை வலுவாக்குகிறது ஆகியவை சீனாவிற்கு அச்சத்தை உண்டு செய்து எல்லையில் நிற்கச் செய்திருக்கின்றது. கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் தற்போது வரை இருநாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சனையானது பூதாகரமாக இருக்கின்றது.

செப்டம்பர் 4 ஆம் தேதி மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ராஜ்நாத் சிங் மற்றும் சீன தொடர்புத் தலைவர் ஆகியோர் பங்குகொண்டு பேசினர். இன்று இராணுவ பிரிகேடர்கள் அளவிளான இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்பு 5 அம்ச கொள்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். எல்லையில் நிலவும் இக்கட்டான சூழலில் இரு நாடுகளும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் அதனை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.

எல்லையில் சீனா தொடர்ந்து தனது படைகளை நிறுத்திப் பதற்றத்தை உண்டாக்க கூடாது. எதுவாக இருந்தாலும் இந்தியா உடனுக்குடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று அறிவுரை அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது. சீன ராணுவம் தீபத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. திபத் எல்லையானது அருணாச்சல பிரதேச மாநிலம்வரை இருக்கின்றது. ஆனால் இந்தியா இதை அனைத்தையும் அறிந்து அனைத்து பகுதிகளிலும் தனது படையை வலுப்படுத்தி அரண் அமைத்துள்ளது. பாதுகாப்புப்படையை மீறினால் பதிலடி தரப்படும் என்றும் இந்திய அறிவித்திருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *