ஜனநாயக கடமை தவறிய செந்தில் பாலாஜி – காரணம் இது தானா ??
மக்கள் பிரதிநிதியாக உள்ள செந்தில் பாலாஜி தனது ஜனநாயக கடமையையான வாக்கினை செலுத்தாதது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது, மேலும்
திமுக தரப்பில் அவரது சொந்த ஊரான கரூர் தொகுதியில் வாக்களித்து விட்டு கோவை வருவார் என எதிர்பார்க்க பட்ட நிலையில்,கோவை தேர்தல் வெற்றி முக்கியம் என்பதாலும், எவ்வித பிரச்சனையும் இன்றி தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவும் கோவையில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்
பூத் ஏஜெண்ட்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் தேவைகள் மற்றும் பிரச்சனைகளை கேட்டறிந்து, அவற்றை சரி செய்தார். அதன் காரணமாக அவரால் கரூர் செல்ல முடியவில்லை என்று கட்சி சார்பில் தெரிவிக்க பட்டுள்ளது

