செப்டம்பர் 10 முக்கிய மாநில மற்றும் தேசிய நிகழ்வுகள்
உலக தற்கொலை தடுப்பு தினம்
உளவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மன அழுத்தத்தினால் ஏற்படும் தற்கொலைகளைத் தவிர்க்க உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சர்வதேச தற்கொலை தடுப்புச் சங்கம் இணைந்து இந்நாளை ஆண்டுதோறும் கடைப்பிடிக்கின்றன.
முக்கிய தலைவர்களின் பிறந்த தினம்
இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர், உத்தரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சர் மற்றும் இந்தியாவின் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய பாரத ரத்னா கோவிந்த் வல்லப் பந்த் பிறந்த தினம்.
இந்தியாவின் 5-வது குடியரசுத் துணைத் தலைவராகவும், தற்காலிகக் குடியரசுத் தலைவராகவும் பணியாற்றிய பி. டி. ஜாட்டி பிறந்த தினம்.
உலகளவில் புகழ்பெற்ற இந்திய-அமெரிக்க கணிதவியலாளர் மற்றும் புள்ளியியல் அறிஞர் சி. ஆர். ராவ் பிறந்த தினம்.
நற்றிணைக்கு முதன்முதலில் உரை எழுதிய புகழ்பெற்ற தமிழறிஞர் மற்றும் உரையாசிரியர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் பிறந்த தினம்
செப்டம்பர் 10 ல் நடந்த மாநில செய்திகள்
இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு
தமிழ்நாட்டு இடைத்தேர்தல் வரலாற்றில் தொகுதிகளைக் கைப்பற்ற பல்வேறு வகையான விசேஷப் பிரச்சார அணுகுமுறைகளும், தீவிரக் களப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் படி தவெக சார்பில், வேட்பாளர்களை அறிவித்துள்ளார் முதலமைச்சர்.மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவித்தார். இதில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்தியபாமாவும் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
திமுக வேட்பாளர்
வழக்கறிஞர் ஐ. பரந்தாமன் (திமுக சட்டத்துறை துணைச் செயலாளர் மற்றும் முன்னாள் எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ).
வழக்கறிஞர் எஸ். சுகன்யா (திமுக மகளிர் அணி நிர்வாகி).
அதிமுக – பாஜக கூட்டணி
நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில்,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாஜக மற்றும் பாமக (PMK) போன்ற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைக் கோரியுள்ளார்.
அதிமுக தனது பழைய கோட்டைகளான இந்தத் தொகுதிகளைத் தக்கவைத்துக்கொள்ள பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பிரச்சாரம் மற்றும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதிகார பூர்வ பெயர் அறிவிப்பு
தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி” என அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) ஆகிய கூட்டணிக் கட்சிகள் பங்கேற்று இந்தப் பெயரை ஏகமனதாக ஏற்றுக்கொண்டன.
சட்டப்பேரவை & கல்விக் கொள்கை விவாதம்
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா 2026’-க்கு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கான நில அளவை 25 ஏக்கரிலிருந்து 12 ஏக்கராகக் குறைப்பது மற்றும் நிரந்தர வைப்பு நிதியை ₹50 கோடியிலிருந்து ₹25 கோடியாகக் குறைப்பது உயர்கல்வியை வணிகமயமாக்கும் எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

