ஆன்மிகம்ஆலோசனை

எந்த கிழமை எந்த தீபம் ஏற்றினால் உங்களுக்கு யோகம்

வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பது சாதாரணமான ஒரு விஷயம்தான் என்று பல பேரும் நினைத்து கொண்டுள்ளனர் சாமிக்காக தினமும் ஏற்றும் தீபம், வீட்டின் ஒளிக்காக ஏற்றும் தீபம் என்று மட்டுமே பலரும் நினைத்து இதுவரை தீபமேற்றிக் கொண்டுள்ளனர். ஆனால் அதற்காக மட்டும் தீபம் ஏற்றுவது அல்ல வீட்டில் ஏற்றும் தீபத்தினால் நமக்கு பல நன்மைகள் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். நம் வாழ்க்கையை மாற்றுவது ஒரு தீப ஒளியில் கூட இருக்கலாம். வாழ்க்கையில் மாற்ற முடியாத சில விஷயங்களாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் விஷயங்களை எளிதில் நீங்களே மாற்ற இந்த முறையில் தீபம் ஏற்றுங்கள் உங்கள் வாழ்வில் அனைத்தும் நல்லதாகவே நடக்கும் சுப காரியங்கள் விரைவில் நடக்கும். ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு எண்ணெயில் தீபம் ஏற்றினால் நீங்கள் நினைத்தது விரைவில் சுபமாக முடியும். எந்த முறையில் தீபம் ஏற்ற வேண்டும் எவ்வாறு தீபம் ஏற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.

திங்கள்கிழமை – ஆதளை எண்ணெய்

திங்கட்கிழமை தோறும் தவறாமல் மேற்கு திசை நோக்கி ஆதுளை எண்ணெயில் தீபம் ஏற்றி வர சொத்து பிரச்சினைகள் சரியாகும்.நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதிகளுக்கு மிக விரைவில் கர்ப்பம் தரிக்கும்.பகைவரின் தொல்லை இல்லாமல் அவர்களை நீங்கள் அடக்கும் நிலை உருவாகும் .நீங்களே எந்த இடத்திலும் ஆளும் நபராக இருப்பீர்.

செவ்வாய்கிழமை – புங்க எண்ணெய்

செவ்வாய்கிழமை அன்று தவறாமல் புங்க எண்ணெயில் வடமேற்கு திசை நோக்கி வாயு மூலையில் தீபம் ஏற்றி வர பில்லி சூனியம் துஷ்ட சக்தி விலகும். செய்வினைகள் விலகி தரித்திரம் நீங்கும்.உங்களுக்குள் இருக்கும் பயங்கள் குறைந்து தைரியமான சூழலை நீங்களே உருவாக்குவீர்கள்.

வெள்ளிக்கிழமை – ஆமணக்கு எண்ணெய்

வெள்ளிக்கிழமை அன்று தவறாமல் ஆமணக்கு எண்ணெயில் கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றி வணங்கி வர சர்வ ஐஸ்வர்யம் கிடைக்கும் ..வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகி செல்வம் பெருகும் .பகைவர்கள் நண்பர்களாகி நீங்கள் எதிர்பார்த்தவர்கள் உங்களிடம் வருவர்.நீங்கள் நினைத்த காரியம் சுபமாக முடியும்.சந்தோசம் என்றும் உங்களுக்கு சொந்தமாக இருக்கும்.

சனிக்கிழமை – புன்னை எண்ணெய்

சனிக்கிழமை தோறும் தவறாமல் புன்னை எண்ணெயில் மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் குடும்பத்தில் என்றும் ஒற்றுமை நிறைந்து காணப்படும். கணவன் மனைவி உறவு அன்பு மட்டுமே நிறைந்ததாக , இருவருக்கும் இடையே நெருக்கம் நிறைந்து சிறந்த கணவன் அல்லது மனைவியாக காணப்படுவீர்ம்..

மேற்கண்ட முறையில் நீங்கள் தீபம் ஏற்றி கடவுளை மனதார நினைத்து வழிபட்டு வர நீங்க நினைத்து பாருங்கள் இனிது நிறைவேறும் உங்கள் வாழ்வில் இருந்து கஷ்டங்கள் இன்றி என்றும் மகிழ்ச்சியுடன் செல்வ செழிப்புடன் காணப்படுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *