சினிமா

பிரபல நடிகை வரலட்சுமி அதிர்ச்சி பேட்டி!

பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. இவர் முதன்முதலில் சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ எனும் படத்தில் தனது நடிப்பை தொடங்கினார். தற்பொழுது கதாநாயகியாகவும், ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.  

   
இவர் சண்டக்கோழி 2, மாரி 2 , சர்க்கார், நீயா 2 போன்ற படங்களில் நடித்தார். அதுமட்டுமில்லாமல் வெல்வெட் நகரம், பாம்பன், டானி, சேசிங், சக்தி போன்ற படங்களிலும் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் பெண்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு சக்தி எனும் அமைப்பினை தொடங்கி நடத்தி வருகிறார்.       
இந்நிலையில் ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இவர் அளித்துள்ள பேட்டியில், ‘நான் ஒரு பிரபல நடிகரின் வாரிசு என்று தெரிந்தும் கூட ஒரு சிலர் என்னை தவறாக பயன்படுத்த முற்பட்டார்கள். பட வாய்ப்பிற்காக ஒருசில பெண்கள் இயக்குனர்கள் இடமும் தயாரிப்பாளர்கள் இடமும் அட்ஜஸ்ட் செய்ய வற்புறுத்தபடுகிறார்கள்.     

 ஆனால் என்னுடைய திறமைக்கு கிடைக்காத பட வாய்ப்பு எதையும் நான் ஏற்கவில்லை. அதுமட்டுமில்லாமல் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு தயார் செய்து கொள்ளவேண்டும்’ என்று அறிவுறுத்தி இருக்கிறார். நன்றி!

2 thoughts on “பிரபல நடிகை வரலட்சுமி அதிர்ச்சி பேட்டி!

  • மிகவும் தைரியமும் திறமையும் வாய்ந்த ஒரு நடிகை. இவரைப் போன்ற துணிச்சல் எல்லோருக்கும் இருத்தல் வேண்டும்.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *