ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

சனிக்கிழமையான இன்று பெருமாளுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

இன்றைய பஞ்சாங்கம்;

நாள் : சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21 ஆம் தேதி சனிக்கிழமை 08.10.2022

திதி : இன்று அதிகாலை 04.15 மணி வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.

நட்சத்திரம் : இன்று இரவு 06.11 மணி வரை பூரட்டாதி. பின்பு உத்திரட்டாதி.

நாமயோகம் : இன்று அதிகாலை 12.47 மணி வரை கண்டம். பின்னர் இரவு 10.26 மணி வரை விருத்தி. பின்பு துருவம்.

கரணம் : இன்று அதிகாலை 04.15 மணி வரை தைத்தூலம் . பின்னர் மாலை 04.12 மணி வரை கரசை. பின்பு வணிசை.

அமிர்தாதியோகம்: இன்று காலை 06.01 மணி வரை சித்த யோகம். பின்னர் 06.11 மணி வரை மரணயோகம். பின்பு சித்த யோகம்.

நல்ல நேரம்

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்…
ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.

சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.

நேத்திரம்: 2 – ஜீவன்: 1

இன்றைய ராசிபலன்:

மேஷம்

புதுவிதமான விஷயங்களுக்காக பயணம் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். முன்னேற்றத்திற்கான சிந்தனை உண்டாகும். கல்வி விஷயத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை, பொறுப்புகள் குறையும். இறைப்பணியில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர் வழியில் உறவு வலுக்கும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும்.

ரிஷபம்

சில நாட்களாக உங்களைக் காயப்படுத்தி வந்த விஷயங்கள் சாதகமாகும். பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் புது உற்சாகமும், நம்பிக்கையும் உண்டாகும். பொது விஷயங்களை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். மற்றவர்களின் ஆதரவும் அதில் கிடைக்கும். உங்களின் சில விஷயங்களில் சிந்தனை மாற்றம் உண்டாகும்.

மிதுனம்

திருமணமானவர்களின் வாழ்க்கையில் துணையின் நல்லாதரவு கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சி நிறைந்த நாளாக செல்லும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். சுப காரியத்தில் இருந்த தடைகள் நீங்கி நன்மை பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் மூலம் உங்களுக்கு சில பிரச்னைகளில் தீர்வு கிடைக்கும். அரசு வகையில் உதவிகள் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் முயற்சிகள் மேம்படும். சிந்தனை சிறக்கக்கூடிய நாள்.

கடகம்

உத்தியோகம், தொழிலில் இருந்த தடைகள், நெருக்கடியான சூழ்நிலைகள் மாறி சாதகமான நாளாக அமையும். பணியிடத்தில் உங்களின் பணிச்சுமை குறையும். எதிர்பாராத உதவிகளால் எதிலும் சாதக பலனைப் பெறுவீர்கள். முயற்சிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும். நீர் சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகளும், பலன்களும் கிடைக்கும்

சிம்மம்

எதிலும் சற்று நிதானமாக செயல்பட வேண்டிய நாள். பிறரின் விஷயங்களில் தலையிடாமல், உங்கள் வேலையை கண்ணும் கருத்துமாக செய்வது அவசியம். உத்தியோகத்தில் எதிர்பாராத பணிச்சுமை, இடமாற்றம் ஏற்படலாம். புது குழப்பம் மனதை ஆட்கொள்ளும். விளையாட்டு விஷயங்களில் சாதகமான நிலை இருக்கும். விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

கன்னி ராசிக்கு சிறப்பான நாள். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சாதக மாற்றங்கள் உண்டாகும். நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். சுப நிகழ்வு நடக்க வாய்ப்புகள் உண்டாகும். காணாமல் போன பொருட்கள் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. நல்ல லாபம் உண்டாகும்.

துலாம்

மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சகோதர சகோதரிகளுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் மறைவதற்கான நாள் உயர்கல்வி கற்ற கொண்டிருப்பவர்கள் கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் ஆகியோருக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.

விருச்சிகம்

நேயர்களுக்கு இன்றைய நாள் சந்திராஷ்டமம் உள்ளது. ஆகவே வீண் அலைச்சல்களை தவிர்த்துக்கொள்வது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களால் சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்ல வேண்டும்.

தனுசு

செய் தொழிலில் வெற்றி காண்பீர்கள்.ன் குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் சற்று கவனம் தேவை.

மகரம்

காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு படிப்பை முடித்து வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் வெற்றி நிச்சயம்

கும்பம்

உங்கள் வார்த்தையில் நிதானம் தேவை. குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வயதானவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது வரும்.

மீனம்

நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். நீங்கள் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள். பலருக்கு பிரயாணம் செய்ய வாய்ப்புகள் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *