செய்திகள்தமிழகம்

வெறும் 5 வாக்குகள் தானா..!! விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற அமமுக வேட்பாளர்..!!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர் 5 வாக்குகள் மட்டுமே பெற்றதால் விரக்தியடைந்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளம் தேர்வுநிலை பேரூராட்சி 8வது வார்டில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் ராமஜெயம் தான் போட்டியிட்ட வார்டில் அதிகப்படியான வாக்குகள் பெறுவோம் என்று எதிர்பார்த்திருந்தார்.

ஆனால் தனது வார்டில் வெறும் 5 வாக்குகள் மட்டுமே பெற்றதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இதனால் விரக்தியில் இருந்த ராமஜெயம் வீட்டிற்கு வந்து யாரிடமும் பேசாமல் இருந்தது வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மனமுடைந்த அமமுக வேட்பாளர் ராமஜெயம், தேர்தலில் படுதோல்வியடைந்த விரக்தியில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதையடுத்து தற்கொலைக்கு முயன்ற ராமஜெயத்தை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் மீட்கப்பட்டுள்ளார். தற்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *