சினிமாசெய்திகள்தமிழகம்

வழிகாட்டு நெறிமுறைகளுடன் தியேட்டர் திறப்பு

கொரோனா பொது முடக்கத்தால் ஆறு மாதங்களுக்குப் பிறகு வரும் 15ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கிளைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் கீழ்க்கண்டவாறு வெளியிட்டுள்ளார்.

சில நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தான் இயங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் வாங்குவதை ஊக்குவிக்க வேண்டும். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதையும், டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க முன்பதிவுக்கு அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தேவையான இடங்களில் கை கழுவும் சோப் மற்றும் சனிடைசர்களை வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் கிருமிநாசினி கொண்டு திரையரங்கில் தூய்மைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகள் மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டும். மாஸ்க் அணிந்த படியே படம் பார்க்க வேண்டும். இடைவேளையின் போது எழுந்து செல்வதை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க : கொரோனா தொற்றினால் மீண்டும் மக்களை எச்சரித்த தென்கொரிய அரசு

எந்தவித அறிகுறியும் இல்லாதவர்களை மட்டுமே தியேட்டரில் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளன. 30 டிகிரி வரை மட்டுமே ஏசியை இயக்க அனுமதி வழங்கியுள்ளது. 50 சதவீத இருக்கைகள் உடன் மட்டுமே திரையரங்குகள் இயங்க வேண்டும் என்றும், ஒரு இருக்கை இடைவெளி விட்டு ஒரு இருக்கையில் அமரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஒரு சீட் விட்டு ஒரு சீட் தியேட்டர் திறப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : கொரோனாவின் கொடூரப் பிடியில் இந்தியா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *