சினிமாசின்னத்திரை

Sirakadika aasai : இந்த குழந்தை வேண்டாம் பேசாம கலைச்சுரு ரோகிணி

சிறகடிக்க ஆசையில் ரோஹிணி கர்ப்பமானதை நினைத்து சந்தோஷத்தில் விஜயா. இந்த குழந்தை வேண்டாம் கலைச்சுரு என சொல்லும் மனோஜால் கோபமான ரோஹிணி.

அப்பாவைப் பத்தி கேட்காதீங்க குழந்தையை கேளுங்க

நமது விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி முதலிடத்தில் எப்பொழுதும் இருந்து வரும் சிறகடிக்க ஆசையில் நமது ரோகிணி கர்ப்பமாக இருக்கிறார் என ஒரு நாடகத்தை போட்டுள்ளார். விஜயா மறக்காமல் உன் அப்பா இன்னும் ஏன் வரல என்று கேட்டவுடன் உடனே கர்ப்பம் போல் நாடகமாடி திசை திருப்பி விடுகிறார் ரோகிணி. இதை அறியாத விஜயா ரோகினி கர்ப்பமானதாக நினைத்துக் கொண்டு குஷியில் கால் தரையில் நிற்காத அளவு சந்தோஷமாக இருக்கிறார்.

இந்த குழந்தை வேண்டாம் ரோகிணி

ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் நம்ம மனோஜ் மட்டும் இந்த குழந்தை வேண்டாம் எனக்கே ஒரு வேலை இல்லை. இந்த நேரத்துல நமக்கு குழந்தை வேண்டாம் என சொன்னவுடன் ரோகிணி பத்ரகாளியாக மாறிவிடுகிறார். இதை சொல்ல உனக்கு வெட்கமாகவே இல்லையா முதல்ல ஒழுங்கா போய் ஒரு வேலையை தேடிக்கொள் நம்ம பாப்பா வந்து உன்ன அசிங்கமா கேக்குறதுக்கு முன்னாடி ஒரு வேலையை தேடிக்கோ என ஆத்திரத்தில் கோபமாக திட்டி விடுகிறார்.

மீனா மட்டும் முதல்ல கர்ப்பம் ஆயிட்டா ???

வீட்டிற்கு வந்தவுடன் விஜயா டாக்டரை பார்த்தீங்களா என்ன சொன்னாரு என ஆர்வமாக கேட்க ரோஹிணி நான் கர்ப்பமா இல்ல என்று சொன்னவுடன் விஜயா நொறுங்கிப் போய் விடுகிறார். அவரது தோழி பார்வதி இடம் இதை சொல்லி மிகவும் வேதனையுடன் பேசுகிறார். அடுத்ததாக இந்த மீனா மட்டும் முதல்ல கர்ப்பம் ஆயிட்டா நான் அவ்வளவுதான். என்னோட ரெண்டு மருமகள்களில் யாராவது ஒருவர் தான் முதலில் கர்ப்பமாக வேண்டும் என்று கொடூர புத்தியுடன் சொல்வதை விஜயாவின் தோழி பார்வதியால் கூட கேட்க முடியவில்லை. மீனாவிற்கு ஆதரவாக அவர் பேசுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *