சினிமாசெய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்

சிம்புவின் STR 48; இரு வேடத்தில் சர்ப்ரைஸ் கொடுக்கும் சிம்பு

சிம்புவின் STR 48 திரைப்படம்

வெந்து தணிந்தது காடு, 10 தல என தொடர்ந்து நடித்துவரும் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்க உள்ளார் இந்த படம் சிம்புவிற்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தரும் என நம்பப்படுகிறது. சிம்பு நடிக்கும் 48 வது படத்திற்கு STR 48 என பெயர் வைத்துள்ளனர். சிம்புவின் இப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இயக்க உள்ளார். மேலும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இப்படத்தில் சிம்புவுடன் சேர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனின் நடிக்கப் போகிறார் என்ற செய்திகளும் வந்துள்ளது. அதிரடி நாயகனும் உலக நாயகனும் இணைந்து நடிக்கும் முதல் படமும் இதுதான் எனவே இப்படத்திற்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. சிம்புவின் எஸ்டிஆர் 48 படத்திற்கு 100 கோடி பட்ஜெட் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் முதல் படம் இதுதான்.

STR 48 இல் ஹீரோவும் நானே வில்லனும் நானே

இப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு புதுவிதமான தோற்றத்தில் காட்சி தருகிறார். நார்மலாகவே இவர் மிக ஸ்டைலாக தான் நடிப்பார்.ஆனால் இப்படத்தில் இன்னொரு சர்ப்ரைஸும் முடிந்து உள்ளது என்ன என்றால் STR 48 படத்தின் ஹீரோவும் சிம்பு தான் வில்லனும் சிம்பு தான் ஹீரோ வில்லன் என இரு கதாபாத்திரத்திலும் நடிகர் சிம்பு நடிக்க உள்ளார் எனவே இப்படத்திற்காக பலவித உடல் பயிற்சிகளை செய்துள்ளார்.ஒரு கதாபாத்திரத்தில் மெலிந்த தோற்றத்துடனும் மற்றொரு கதாபாத்திரத்தில் உடல் எடை கூடும் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

STR 48 படத்தில் சிம்புவிற்கு ஜோடியாகும் ஹீரோயினிகள் யார் என இன்னும் முடிவாகவில்லை. நடிகை ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெட்ஸ், திஷா படானி ஆகியோர் தேர்வு செய்து வைத்துள்ளனர் இவர்களில் சிம்புவிற்கு ஜோடியாக போவது யார் என்று இன்னும் தீர்மானிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சிம்புவின் STR 48 திரைப்படம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனவே சிம்புவின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக திரைப்படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டுள்ளனர். கண்டிப்பாக இந்த படம் சூப்பர் ஹிட் படமாக வரும் என்று கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சிம்புவின் கடின உழைப்பு என்றும் வீண் போகாது என்றும் பேசப்பட்டு வருகிறது. மேலும் இப்படம் குறித்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கனவுகள் நினைவாகும் என்று குறிப்பிட்டு உள்ளார். எனவே அவர் கண்ட கனவு இப்படத்தின் மூலமாக நினைவாகும் என்பதை கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *