செய்திகள்தமிழகம்

பரபரப்பை ஏற்படுத்தும் சாத்தான்குளம் வழக்கு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 5 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை செய்து வருகின்றது. இவ்வழக்கில் அவர்களும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியது பரபரப்பை ஏற்படுத்துகிறது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஏற்கனவே ஒரு இன்ஸ்பெக்டர், ரெண்டு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் என மொத்தம் 5 போலீசார் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

மேலும் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து காவலர்கள் மீண்டும் அழைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 5 காவலர்களை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்யப்பட்டு வந்தது மற்றும் விசாரணையை தொடர்ந்து இவர்கள் ஐந்து பேரையும் கைதாக வாய்ப்பு உள்ளது என வெளிவந்த தகவலால் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று விசாரணை செய்யப்பட்டு வருபவர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர், காவலர்கள் ஆகியோர்கள் என்பது தெரியவந்துள்ளது. சாத்தன்குளம் வழக்கை சிபிஐ ஏற்று நடத்த ஒப்புக் கொண்டுள்ளதாக மத்திய அரசு தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்ததால் இந்த வழக்கு சிபிஐக்கு விரைவில் மாறும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் 5 போலீஸ் அதிகாரிகள் கைது பரபரப்பை ஏற்படுத்தும் சாத்தான்குளம் வழக்கு பற்றி பொருத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *