விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தும் ரோஹித் சர்மா

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச அளவில் இந்தியாவுக்காக சிறப்பான ஆட்டத்தை விளையாடும் சிறந்த வீரர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது சிறப்பாக கிரிக்கெட் விளையாடுவதற்காக ரோகித் ஷர்மாவுக்கு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோகித் ஷர்மா இன்னும் சில நாட்களில் ஆரம்பமாக உள்ள ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்த உள்ளார்.

ரோகித் ஷர்மா ஹிட்மேன் என கிரிக்கெட் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஓபனிங் பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா. இந்தியாவுக்காக நான் மேலும் பல பெருமைகளை தேடித் தருவேன் என்று கூறுகிறார்.

இந்நிலையில் ரோகித் சர்மா அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் எல்லோரும் என் மீது காட்டிய அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி.

ஒரு அற்புதமான பயணம் இது. நாட்டிலேயே சிறந்த விளையாட்டு வீரராக கொடுக்கப்படும் விருதை நான் பெறுவது மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன். இதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இதன் மூலம் உங்கள் அனைவருக்கும் நான் கடமைப் பட்டிருக்கிறேன். உங்கள் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை. இந்தியாவுக்காக நான் மேலும் பல பல பெருமைகளை தேடி தருவேன் என்று உறுதியளிக்கிறேன்.

நாம் எல்லோரும் சமூக விலகலை கடைப்பிடித்து வருவதால் உங்கள் அனைவரையும் வெர்சுவலாக ஹக் செய்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *