செய்திகள்தமிழகம்

நீ குழந்தை..பா.. விஜய் ரசிகர் வேட்புமனு நிராகரிப்பு…

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து கூடானி பேசு வார்த்தைகளை பல கசப்புடன் கூட்டணி கட்சிகள் முடித்த்ய் கொண்டு. தேர்தல் களத்திற்கு சென்றுள்ளனர். மேலும் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சி தொகுதியில் வெற்றி பெற பல வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் போட்டியிட 443 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து வேட்புமனுக்கள் மீது பரிசீலனை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 13 வது வார்டில் விஜய் மக்கள் மன்றம் சார்பில் 19 வயது நிரம்பிய பரணி என்பவர் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய 21 வயது நிரம்பியிருக்க வேண்டும் எனக்கூறி அதிகாரிகள் அவருடைய வேட்பு மனுவை நிராகரித்து விட்டனராம்.

இதனை நெட்டிசன்கள் தேர்தலில் போட்டியிட 21 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்பது கூட தெரியாமல் விஜய் மக்கள் இயக்கத்தினர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக பல்வேறு மீம்ஸ்களை வெளியிட்டு விஜய் ரசிகர்களை திணறடித்து வருகிண்றனர். இதற்கு பதிலடி கொடுக்க விஜய் ரசிகர்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *