செய்திகள்தமிழகம்

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை குளிர்வித்து உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு, ஆர்கே பேட்டை, திருவாலங்காடு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்துள்ளது.

ஒரே இரவில் ஆர்கே பேட்டையில் 10 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளன. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட 39 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகியது.

கீரனூர். அரக்கோணத்தில் 13 சென்டிமீட்டர்/ மீனம்பாக்கம், ஆலந்தூர் பகுதிகளில் தல 11 சென்டி மீட்டரும் மழை பெய்ததாக பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

வானிலை ஆய்வு மையம் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *