கல்விசினிமா

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக மாறுக்கிறார் புரோட்டா சூரி

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக மாறுக்கிறார் புரோட்டா சூரி, இது என்னடா கால கொடுமைன்னு யோசிக்காதிங்க, தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் நடிகர் சூரி ஆவார், கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது குடும்ப உறுப்பினர்களுடன் செலவழித்த நேரத்தின் வீடியோக்களைப் பகிர்வதன் மூலம் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் இந்த வைரஸ் மற்றும் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பி வருகிறார். இது உண்மையில் அவசியமானது ஆகும் சிரிப்பு மூலம் சிந்தனைகளை விதைத்து வருகின்றார்.

பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், மீண்டும் திறக்க சிறிது நேரம் ஆகலாம் என்பதால் வீடியோ கான்பரன்சிங் மற்றும் ஆன்லைனில் வகுப்புகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கை உள்ளது. சூரி மதுரை அரசு மற்றும் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக மாறியதுடன், கற்றலின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு நினைவூட்டுவதற்கு அந்த நேரத்தைப் பயன்படுத்துகிறார்.

பள்ளி வாழ்க்கை பகிரும் சூரி:

மேலும் அவரது பள்ளி வாழ்க்கை குறித்த பெருங்களிப்புடைய சம்பவங்களையும் விவரித்தார். மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை நோக்கி உந்துதல் அளிக்க சூரியின் இந்த சிறந்த செயல் மாணவர்களுக்கு பெரிதும் உதவும். இது உண்மையில் பெரும் மதிப்புமிக்க சேவையாகும் இதனை எண்ணி நாம் பெருமை அடைய வேண்டும்.

முன்னணி நடிகரான சூரி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சிறுத்தை சிவா இயக்கிய ‘அண்ணாத்தே ‘ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், மேலும் வெற்றிமாறன் இயக்கம் புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

இவர் சினிமாவில் தான் சிரிப்பு நடிகர் ஆனால் நிஜத்தில் இவர் சீரியஸான சிம்பிள் மேதைதான். கொரானா ஊரடங்கு தொடங்கியதும் ஆளாளுக்கு யூடியூப்பில் அலப்பறைகள் செய்து வருகின்றனர். அவர்களில் மிகவும் ரகளையாக ரணகளமாக வீட்டில் குழந்தைகளுடன் அளவலாவி நமக்கு ஒரு சிரிப்பு கலந்த சிந்தனையை வித்தைதார். இவரது பொறுப்புணர்வு அதில் தெளிவாக நாம் உணர முடிந்தது. குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குதல், மாஸ்க் போடுதல் வீட்டில் இருத்தல், சமூக இடைவெளி, கற்றலைப் பகிர்தல் என படு ஜோராக இவர் பதிவிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *