சினிமாசின்னத்திரையூடியூபெர்ஸ்

Pandian Stores update : ராஜிக்காக டிரைவர் வேலைக்கு போகும் கதிர்

நமது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் ராஜிக்கு இடையே இப்பொழுது புரிதல் வந்துள்ளது.

குடும்ப கதையாக அனைவர் மனிதனும் இடம்பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் மற்றும் ராஜி ஜோடி எப்போது சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது அந்த எதிர்பார்ப்பு தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வருகிறது.

அவனே ஒரு தண்டம் – பாண்டியன்

கோமதி ராஜிக்காக பாண்டியனிடம் பணம் கேட்டு செல்கிறார். அப்பொழுது அவர் சற்றும் எதிர்பாக்காதபடி பொண்டாட்டிய பாத்துக்க முடியாதவன் எதுக்கு கல்யாணம் பண்ணனும் அவனே வீட்ல ஒரு தண்டச்சோறு இதுல அவன் கூட்டிட்டு வந்த பொண்ணு வேற நான் தான் பாக்கணும் என சத்தமாக பேசி விடுகிறார். இதைக் கேட்ட ராஜி கண்கலங்கி அழுது கொண்டே சென்றுவிடுகிறார்.

ராஜிக்காக வேலைக்கு செல்ல முடிவெடுக்கும் கதிர்

பாண்டியன் பேசியதையும் ராஜி அழுததையும் பார்த்துக் கொண்டே இருந்த கதிர், இனிமேல் இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்து ஒரு வேலைக்கு செல்ல முடிவெடுத்து விட்டார். தனது நண்பர் உதவியுடன் வேலையில் சேர்ந்த கதிருக்கு முதல் நாளே ஆக்டிங் டிரைவருக்கு ஆள் வேண்டும் என்ற நிர்பந்தம் வருகிறது. சற்றும் சலிக்காமல் அந்த வேலையை ராஜிக்காக செய்யத் துணிகிறார் கதிர்.

பாசமலர் படத்தை மிஞ்சும் அண்ணன் தம்பி பாசம்

கதிர் டிரைவராக வேலைக்கு சென்று விஷயத்தை தெரிந்த சரவணன் மிகவும் வருத்தப்பட்டு கதிருக்கு போன் பண்ணி கதிர் பார்த்து போ நீ இவ்வளவு தூரம் போனதே இல்லை பத்திரமா வீட்டுக்கு வந்துரு என பாசமழையை பொழிகிறார். இன்னொரு பக்கம் செந்தில் நம்ம கைல காசு இருந்தா இப்ப கதிர் வேலைக்கு போயிருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது இது எல்லாத்துக்கும் நம்ம அப்பா தான் காரணம் என புலம்புகிறார். பாசத்தில் பாசமலர் படத்தையே மிஞ்சி விடுவார்கள் போல இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *