சினிமாசின்னத்திரைதமிழகம்

பாண்டியன் ஸ்டோர் சீரியலை விட்டு காவ்யா விலக இதுவா காரணம்

நமது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பல வருடங்களாக வெற்றியை தழுவி டிஆர்பி யில் முதலிடம் வகிக்கும் சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளது. இந்த சீரியல் ஒரு குடும்ப ஒற்றுமையை குறிக்கும் ஒரு சீரியலாகவும் அதே ஒற்றுமையால் ஏற்படும் பிரச்சனைகளையும் முன்னெடுத்து வைப்பதால் இக்காலத்தில் கூட்டு குடும்பமாக வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் இது மிகவும் பிடித்த சீரியல் ஆக உள்ளது .

அது மட்டுமல்லாமல் கூட்டு குடும்பத்தில் இல்லாமல் தனியாக இருக்கும் பல நபர்களையும் கூட்டு குடும்பத்திற்குள்ளேயே கூட்டி செல்லும் ஒரு சிறந்த சீரியலாக இந்த சீரியல் விளங்கி வருகிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஃபேமஸான கதாபாத்திரம் என்றால் அது முல்லை கதாபாத்திரம் தான். சீரியலை பார்க்கும் பல பேரு உள்ளனர் முதலில் இந்த சீரியலில் முறையாக சித்ரா நடித்து வந்தார். ஏராளமான ரசிகர்களை சம்பாதித்த சித்ரா இறந்த பிறகு அவருக்கு பதிலாக காவியா அறிவுமணி நடித்து வந்தார். சித்ராவின் மறைவை மறக்க வைக்கும் அளவு அந்த கேரக்டருக்கு ஏற்ற முகமாக காவியா அறிவுமணி விளங்கினார்.பலரும் அப்படியே முல்லையாக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு இவர் நடித்து வந்தார.

இந்த நிலையில் காவியா தற்போது இந்த சீரியலை விட்டு விலகப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக குறைவதாலும் வேறு சில தனிப்பட்ட காரணத்தாலும் இந்த செய்திகளை விட்டு இவர் விலக உள்ளார்.இவருக்கு பதிலாக இனி அடுத்து சிப்பிக்குள் முத்து நாடகத்தில் கதாநாயகியாக நடித்த லாவண்யா தற்போது அடுத்த முறையாக தேர்வாகியுள்ளார். அதிகாரப்பூர்வமாக இவர் தான் அடுத்த முல்லை என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. முல்லை கதாபாத்திரத்திற்கு மவுசு அதிகமாக இருப்பதாலோ என்னவோ அந்த கதாபாத்திரத்திற்கு வரும் நடிகைகள் மாறிக்கொண்டே உள்ளனர் இனியும் எத்தனை முல்லை தான் வரப்போகிறார்களோ தெரியவில்லை. இருந்தாலும் இந்த சீரியலை விட்டு காவியா அறிவுமணி விலகுவது அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது ஆனால் அவர் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு போக உள்ளார் அவர் மென்மேலும் வளர அவர்கள் ரசிகர்கள் மனதார வாழ்த்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *