செய்திகள்தமிழகம்

அடுத்த 3 நாள் உஷார் …வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை; அடுத்த 24 மணி நேரத்தில், வடகடலோர தமிழகம் மற்றும், அதனையொட்டியுள்ள பகுதிகளில் மிதமான மழையும், நாளைய தினம் தமிழகம் மற்றும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 6ம் தேதியும் வடகட்லோர பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும், 7, 8ம் தேதிகளில் தமிழகம் , புதுச்சேரியில் பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகாலையில் பனி மூட்டமே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *