செய்திகள்தமிழகம்

ஜனனும் மரணமும் ஒரே நாளான சோகம்!!!

வீரபாண்டி ராஜா மரணம்

இம்மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் இறப்பது சாதாரணமான விஷயம் தான். ஆனால் ஒரு மனிதனுக்கு பிறந்த தினமும் அவன் இறந்த தினமும் ஒன்றாக வருவது மிகக் கொடுமையான விஷயம்.

சேலத்து மக்களுக்கு ஏற்பட்ட சோகம்

அப்படிப்பட்ட கொடுமையான சோகமான ஒரு தினமாக இன்று சேலத்து மக்களுக்கு வந்துள்ளது.. வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜாவுக்கு இன்று பிறந்தநாள்..

சேலத்து சிங்கத்தின் மகன் காலமானார்

அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கருணாநிதியால் சேலத்து சிங்கம் என போற்றப்பட்ட தனது தந்தையான வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபொழுது அங்கேயே மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட ஆசையாக சென்றவர் உயிரிழந்த சம்பவம் சேலத்து மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. வீரபாண்டி ஆறுமுகம் மகன் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்று சொல்லி திமுக தொண்டர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதேபல் சென்ற ஆண்டு திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனது பிறந்த நாளிலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *