செய்திகள்தமிழகம்

காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து புதிய ரயில்கள் இயக்கம்

சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு செல்வதற்காக புதிய ரயில்கள் விடப்பட்டுள்ளன. குஜராத் மாநிலம் கெவாடியாவில் ஒற்றுமை சிலை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

சர்தார் வல்லபாய் சிலை இங்கு செல்ல தடையற்ற போக்குவரத்தை இணைப்பதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை உள்ளிட்ட பகுதியில் இருந்து, புதிதாக 8 ரயில்கள் காணொளி வாயிலாக கொடியசைத்து பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.

மத்திய பிரதேச மாநில முதல்வர், மகாராஷ்டிர மாநில முதல்வர், உத்தரப் பிரதேச மாநில முதல்வர், குஜராத் மாநில முதல்வர் ஆகியோரால் கொடியசைத்து புதிய ரயில்களை தொடங்கி வைக்கப்பட்டன. ரயில்நிலைய கட்டிடங்களையும், அகல ரயில் பாதைகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *