டெக்னாலஜிவாகனங்கள்

அக்டோபர் 15 முதல் இரண்டு மாடல்களில் ‘ஹோண்டா சிபி 350’

நெடுந்தூரம் பயணம் செய்யும் பைக் பிரியர்களுக்கு, இளம் வயதினருக்கு பிடிக்கும் வகையில் ஹோண்டா நிறுவனம் ஹெச்’நெஸ் சிபி 350 என்ற புதிய பைக்கை தயாரித்துள்ளனர். புல்லட் பைக் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். இந்திய சந்தையில் எத்தனையோ பைக்குகள் இருந்தாலும், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் பைக்குக்கு தனி மவுசு இருக்கின்றன. மேலும் இந்த பைக் வைத்து எதிராக பல்வேறு நிறுவனங்களும் புதிய பைக்குகளை தயார் செய்து வெளியிடுகின்றன.

அதிநவீன தொழில் நுட்பங்கள்

350 சிசி இன்ஜின் பவர் கொண்ட இரண்டு மாடல்களிலும் அதிநவீன தொழில் நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஹோண்டா ஸ்மார்ட்போன் வாய்ஸ் ஆக்டிவேட் சிஸ்டம், ப்ளூடூத் மூலம் இணைக்கும் வசதி.

சிங்கிள் சிலிண்டர், விரைவான ஏர் கூலிங் சிஸ்டம் வசதி உள்ளது.

அக்டோபர் 15ஆம் தேதி முதல்

அக்டோபர் 15ஆம் தேதி முதல் இந்த பைக் முன்பதிவிற்க்கு வருமென்று தெரிவிக்கப்பட்டுள்ளன. சிபி 350 டிஎல்எக்ஸ் மற்றும் சிபி 350 டிஎல்எக்ஸ் ப்ரோ போன்ற இரண்டு ரகங்களில் வெளியிடப்படுகின்றன. சிபி 350 டிஎல்எக்ஸ் ப்ரோ மாடலின் விலை ரூபாய் 1.90 லட்சம், சிபி 350 டிஎல்எக்ஸ் மாடல் ஷோரூம் விலை ரூபாய் 1.85 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இரண்டு மாடல்

இந்த இரண்டு மாடல்களிலும் அதிநவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஹோண்டா ஸ்மார்ட்போன் வாய்ஸ் ஆக்டிவேட் சிஸ்டம், தொழில்நுட்பம், ப்ளூடூத் மூலம் இணைக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளன. பைக்கின் இருப்பிடம் இதன் மூலமாக இன்கமிங் மெஸேஜ், போன் கால், மியூசிக் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *