சினிமாசின்னத்திரை

அடுத்த சித்தி நீலம்பரியா

சித்தி சீரியலில் அடுத்த சித்தியாக மீனா அல்லது ரம்யாகிருஷ்ணன்

சித்தி சீரியலில் அடுத்த சித்தியாக மீனா அல்லது ரம்யாகிருஷ்ணன் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது.

தமிழகத்தில் சித்தி சீரியல் முதல் பாகம் பெருமளவில் அனைத்து தரப்பு மக்களாலும் பார்க்கப்பட்டது. அந்த நாடகத்தின் நடிகை ராதிகா அவர்களின் நடிப்பில் வெளிவந்து பிரபலமாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் வெற்றிகரமான முதல் பாகத்திற்கு பின்பு தற்போது தமிழகத்தில் சித்தி இரண்டாம் பாகம் சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் ராதிகா சரத்குமார் அவர்கள் அடுத்து வரும் தேர்தலுக்கு தனது கணவருக்கு உதவ வேண்டுமென்றும் மேலும் கொரோனாவினால் ஏற்பட்ட தனது ராடன் நிர்வாகம் இழப்பு சீர் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருக்கின்றது.

இதற்காக நேரம் செலவு செய்ய வேண்டியது அதிகமாக இருப்பதால் சித்தி சீரியல் இரண்டாம் பகுதியில் தான் நடிப்பதை நிறுத்த உள்ளார். இதனையடுத்து சித்தி சீரியல் 2 பாகத்தில் நடிக்க மீனா அல்லது ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கின்றது.

மேலும் படிக்க : நயன்தாரா சொல்லும் நச்சுனு நாலு டிப்ஸ்

இருவரில் ஒருவர் நடித்தால் சித்திக் சீரியல் 2 மேலும் அதிக பார்வையாளர்களை பெரும் என்று நம்பப்படுகின்றது. அத்துடன் பார்வையாளர்கள் குறையும்போது சீரியல்கள் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளது. ஆகவே தற்போது திரையுலகில் மிகவும் பிஸியாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் மற்றும் மீனா இருவரில் ஒருவர் சித்தியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்து என்ன நடக்கும் என்று, சித்தியாக ராதிகாவைப் பார்த்துப் பழக்கப்பட்ட மக்களுக்கு புது சித்தியை ஏற்பார்களா என்ற சந்தேகமும் இருக்கின்றது.

மேலும் படிக்க : மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள…மஞ்சு விரட்டு படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *